இந்தியாவில் உணவு பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரியும், பருவமழை பொய்த்த காரணத்தால் தக்காளி, வெங்காயம் முதல் அரிசி, பருப்பு வரையில் மக்கள் தினசரி பயன்படுத்தும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் கோதுமை மாவு-ஐ ஒரு கிலோ வெறும் 27.50 ரூபாய்க்கு மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதை எங்கு வாங்குவது..?

பாரத் ஆட்டா விற்பனையின் சோதனை ஓட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் வெங்காயம், பருப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கோதுமை மாவு விற்பனையைத் துவங்கியுள்ளது.
மத்திய அரசு இந்த மலிவு விலை கோதுமை மாவு விற்பனையை NAFED, NCCF மற்றும் கேந்திரிய பந்தர் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களும் அதன் கீழ் இருக்கும் அமைப்புகள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த 3 அமைப்புகள் கீழ் 800 நடமாடும் கடைகள் (வேன்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது) மற்றும் 2,000 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதில் NCCF அமைப்பின் கீழ் தமிழ்நாடு அரசு நுகர்வோர் கூட்டுறவு அமைப்பும் உள்ளதால் மத்திய அரசு NAFED, NCCF மற்றும் கேந்திரிய பந்தர் ஆகிய 3 கூட்டுறவு நிறுவனங்களும் ஒதுக்கப்பட்ட 2.5 லட்சம் டன் கோதுமையை அரைத்துப் பாக்கெட் செய்து விநியோகம் செய்யும்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு 70 ரூபாய் வரையில் விற்கப்படும் வேளையில் மத்திய அரசு விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்ட கோதுமையை இந்த 3 அமைப்புகள் வாயிலாக அரைத்துப் பாக்கெட் செய்து விற்கப்படுகிறது.
மத்திய அரசு ஜூலை மாதம் 'பாரத் பருப்பு' என்ற பெயரில் ஒரு கிலோ பருப்பை 60 ரூபாய்க்கு விற்கும் திட்டம் அறிமுகம் செய்தது. இது தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கும், நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் வாயிலாக மக்களிடம் சேர்க்கப்பட்டது.
இதே முறையின் கீழ் தற்போது கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு துவங்கியுள்ளது. விலைவாசி உயர்வின் சுமையைப் பண்டிகை காலத்தில் குறைக்கும் பொருட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது, இனிப்பு முதல் உணவு வரையில் மக்களின் முக்கிய உணவுப் பொருட்கள் தேவையில் கோதுமை மாவு இந்தத் தீபாவளி பண்டிகையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications