பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு.. சௌந்தர்யாவுக்கே இந்த நிலைமையா? அநியாயமாய் போன ரூ.18 லட்சம்!

தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடா வருடம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் பங்கேற்பாளர்களை ஒரு வீட்டிற்குள் அனுப்பி வாரம் வாரம் ஒரு நபர்களை வோட்டிங் மூலம் வெளியில் அனுப்புவார்கள். இறுதியில் யார் மிஞ்சி இருக்கிறார்களோ அவர்கள் தான் வின்னர். அப்படி தமிழ் பிக் பாஸில் பங்கேற்பாளராக வீட்டிற்குள் சென்ற சௌந்தர்யா நஞ்சுண்டன் தான் மோசடிக்கு பலியாகி ரூ.17 லட்சம் ரூபாயை இழந்ததாகக் கூறியுள்ளார்.

"வேற மாதிரி ஆபீஸ்" என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் பிரபலம் அடைந்த சௌந்தர்யா, தான் பண மோசடியில் சிக்கி பணத்தை இழந்ததால் பார்க்கும் பார்வையாளர்கள் மற்றும் சக பங்கேற்பாளர்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு தான் ரூ.17 லட்சம் ரூபாயை இழந்ததாகவும், இந்த மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது தனக்கு தெரியவில்லை என்றும், தயவுசெய்து அனைவரும் விழிப்புடன் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும், உணர்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார்.

 பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு.. சௌந்தர்யாவுக்கே இந்த நிலைமையா? அநியாயமாய் போன ரூ.18 லட்சம்!

யாரும் எதிர்பார்த்திராத வகையில் சௌந்தர்யாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த செய்தியை வெளியிட்டது, வீட்டில் தங்கி இருக்கும் பிற பங்கேற்பாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே இந்த வார எலிமினேஷன் நெருங்கி வருவதால் பதற்றம் நிலவுகையில் சவுந்தர்யா தான் ஏமாந்த செய்தி குறித்து வெளியிட்டார்.

முத்து, தீபக், விஷால், அருண், ஜாக்குலின், பவித்ரா, சஞ்சனா, அனந்தி, அன்ஷிதா மற்றும் சுனிதா போன்ற பங்கேற்பாளர்கள் எவிக்சன் லிஸ்டில் இருக்கின்றனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று நாளை அல்லது நாளைய மறுநாள் தெரியவரும். கூட்டணிகள் உருவாகி விளையாடும் யுக்திகள் தீவிரம் அடைந்து வருவதால் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் போட்டியில் தங்களின் இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

சௌந்தர்யாவின் உணர்ச்சிகரமான உரையாடல் இது போன்ற மோசடிகளின் தாக்கத்தை நினைவூட்டுகிறது. மேலும் டிஜிட்டல் உலகில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பார்வையாளர்கள் மற்றும் சக போட்டியாளர்களுக்கு உணர்த்துகிறது.

சமீபகாலமாக டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி அதிகரித்து வருகிறது. அதாவது சிபிஐ அதிகாரிகள் போல காட்டிக் கொண்டு செய்யாத தவறை செய்ததாக நம்ப வைத்து, அதற்காக பணம் செலுத்த சொல்லி மோசடி செய்வது தான் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி. 2024-ஆம் நிதியாண்டில் முதல் 4 மாதங்களில் மட்டும் ரூ.1,750 கோடியை மக்கள் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே உங்களை யாரேனும் தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறினாலோ அல்லது உங்களுடைய நம்பரை பயன்படுத்தி குற்றங்கள் நடந்திருப்பதாக கூறினாலோ, நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்துங்கள். அதன் பிறகு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+