இதுவரை இல்லாத அளவு உச்சம்.. செம ஏற்றத்தில் பிட்காயின்.. தங்கத்தினையே விஞ்சிடுமோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோ கரன்சி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது உலகின் பல நாடுகளும் அனுமதித்து வருகின்றன. இதனால் கிரிப்டோ கரன்சியில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது கிரிப்டோ கரன்சி விலையினையும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

இதே சமீபத்தில் ஜேபி மார்கன் சேஸ் அண்ட் கோ ஒரு அறிக்கையில், முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக் கொள்வது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை பாதிக்கக்கூடும் என்றும் கூறியிருந்தது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே, தங்கத்தில் இருந்து பணம் வெளியே எடுக்கப்பட்டு வருவதாகவும், பிட்காயின்களில் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன. அதோடு முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சியின் நீண்ட கால நோக்கில் முதலீடுகளை அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பைக் வாங்க போறீங்களா? ஜனவரிக்குள்ள வாங்கிடுங்க.. ஜனவரி 1க்கு மேல் விலை அதிகரிக்கப்போகுது..!பைக் வாங்க போறீங்களா? ஜனவரிக்குள்ள வாங்கிடுங்க.. ஜனவரி 1க்கு மேல் விலை அதிகரிக்கப்போகுது..!

பிட்காயின் வரலாற்று உச்சம்

பிட்காயின் வரலாற்று உச்சம்

பல நாடுகளில் கிரிப்டோகரன்சி தடை விதிகப்பட்ட நிலையிலும் கூட, தற்போது இதுவரை இல்லாத அளவு 20,000 டாலரை தாண்டியுள்ளது. முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகள், கச்சா எண்ணெய், தங்கத்தில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வரும் நிலையில், தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் சந்தைகள் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன.

தொடர் ஏற்றம்

தொடர் ஏற்றம்

இதன் காரணமாக தற்போது வளர்ந்து வரும் முதலீட்டு ஆப்சனான பிட்காயினில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக நேற்றுமட்டும் பிட்காயின் விலையானது ஒரே நாளில் 4.5% ஏற்றம் கண்டு 20,440 டாலராக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 5000 டாலர்கள் என்று இருந்த நிலையில், இன்று நினைத்து பார்க்க முடியாத அளவு எழுச்சி கண்டுள்ளது.

இந்தியாவில் அனுமதி

இந்தியாவில் அனுமதி

இது குறிப்பாக 2020ல் பிட்காயின் மதிப்பு இரட்டிப்பு வளர்ச்சி கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களையும் வர்த்தகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. பல்வேறு நாடுகளில் இந்த கரன்சியினை தடை செய்துள்ள நிலையிலேயே ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பல நாடுகளும் கரன்சியினை அனுமதிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக சமீபத்தில் அந்த தடையை நீக்கி, இந்தியாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தினை செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது

வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது

சமீபத்திய காலங்களில் இந்த பிட்காயின் வர்த்தகம் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இதன் மூலம் முதலீட்டாளர்களும் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் நிபுணர்கள் இந்த பிட்காயின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும். இது 2030ல் 1 கோடி ரூபாயினை எட்டும் என்றும் கணித்துள்ளனர். ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல ஆப்சன் என்றும் கூறியுள்ளனர்.

பிட்காயின் ஒரு சிறந்த முதலீடு

பிட்காயின் ஒரு சிறந்த முதலீடு

சமீபத்தில் வல்லுனர்கள் பிட்காயின் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற ஒரு திட்டம் என்றும் கணித்துள்ளனர். அதோடு ZebPayவின் தலைமை நிர்வாக அதிகாரி 2030க்குள் பிட்காயின் 1 கோடி ரூபாயினை எளிதில் எட்டலாம் என்று சமீபத்தியில் கூறியிருந்தார். ஆக பிட்காயினில் முதலீட்டாளர்கள் திட்டமிட்டு முதலீடு செய்யலாம் என்றும் கூறியிருந்தார்.

தங்கம் Vs பிட்காயின்

தங்கம் Vs பிட்காயின்

ஆக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பிட்காயினுக்கு மாற்ற தொடங்கினால், வரும் ஆண்டுகளில் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு இது சிக்கலாக இருக்கும். நிறுவன முதலீட்டாளர்கள் பிட்காயின் முதலீட்டினை தேர்தெடுக்க தொடங்கியுள்ளனர். ஆக இதனால் தங்கம் விலை பாதிக்கப்படுமா? அப்படியே பாதித்தாலும் விலை குறையுமா? அல்லது பாதுகாப்பு புகலிடமாகவே இருக்குமா? கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bitcoin crosses $20,000- mark for first time, gold may suffer amid Bitcoin

Bitcoin & Gold updates.. Bitcoin crosses $20,000- mark for first time, gold may suffer amid Bitcoin
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X