யெஸ் பேங்க்-ன் வாடிக்கையாளர்கள், 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்கக் கூடாது என்கிற சிக்கலான கட்டுப்பாடு தான் நேற்று மாலை முதல் ஹாட் நியூஸாக பரவிக் கொண்டு இருக்கிறது.
இந்த செய்தியைக் குறித்து பல அரசியல்வாதிகளும் தங்கள் கருத்துக்களைச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.
அந்த வரிசையின் முன்னணியில் இடம் பிடித்து இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம்.
யெஸ் பேங்க் கட்டுப்பாடுகள்
யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்க முடியாது என்பதைத் தாண்டி, வங்கிக்கே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. யெஸ் பேங்க் இந்த கட்டுப்பாடு காலத்தில் எந்த ஒரு புதிய கடனையும் கொடுக்கவோ அல்லது பழைய கடனை புதுப்பிக்கவோ முடியாது. புதிதாக எங்கும் முதலீடு செய்ய முடியாது. இப்படி பல கட் அண்ட் ரைட் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது ஆர்பிஐ.
ப சிதம்பரம் 1
இந்த யெஸ் பேங்க் செய்தியைக் குறித்து ப சிதம்பரம் தன் டிவிட்டர் பக்கத்தில் "பாரதிய ஜனதா கட்சி தான் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. இவர்கள் இந்தியாவின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை நிர்வகிக்கும் மற்றும் முறைப்படுத்தும் லட்சணம் தற்போது தெரிந்துவிட்டது" என காட்டமாக பதிவு செய்து இருக்கிறார்.
ப சிதம்பரம் 2
மேலும் தொடர்ந்து பதிவிட்டு இருந்த முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் "முதலில் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி சிக்கலுக்கு உள்ளானது. இப்போது யெஸ் பேங்க் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த அரசுக்கு இதைப் பற்றி ஏதாவது வருத்தம் இருக்கிறதா? அரசு தன் பொறுப்பில் இருந்து விலகி விட முடியுமா? அடுத்து மூன்றாவது வங்கி ஏதாவது இருக்கிறதா?" என கேள்விக் கணைகளைத் தொடுத்து இருக்கிறார்.
தோல்வி
மேலும் யெஸ் பேங்கின் பிரச்சனை ஒரு முழு நிர்வாக தோல்வி எனச் சொல்லி இருக்கிறார். இத்தனை நடந்து கொண்டிருக்கும் போதும் மத்திய அரசு தொடர்ந்து அமைதியாக இருக்கிறது. ஏற்கனவே, மும்பை ஆர்பிஐ அலுவலகத்தில் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதுவரை அரசு அதற்கு பதில் சொல்லவில்லை எனவும் சொல்லி இருக்கிறார் ப சிதம்பரம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications