இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி தான்.. சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்..!

ஹைதராபாத்: 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள் தனம் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிதான் என சுப்பிரமணிய சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அவ்வப்போது தனது சொந்தக் கட்சியினரையே விமர்சிப்பது சுப்பிரமணிய சுவாமியின் வழக்கமான செயல் தான்.

இந்த நிலையில் இந்தியா 2030க்குள் பொருளாதாரத்தில் வல்லரசு என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

ஆண்டுக்கு 10% வளர்ச்சியா?

ஆண்டுக்கு 10% வளர்ச்சியா?

அதில் சுப்பிரமணிய சுவாமி பேசுகையில், இந்தியா வல்லரசாக வேண்டுமானால் ஆண்டுக்கு 10% வளர்ச்சி இருந்தால் தான் அது சாத்தியமாகும். மேலும் முதலீட்டு விகிதம் 37% ஆகவும் இருக்க வேண்டும். ஆக இதே வேகத்தில் இந்தியா பயணித்தால் சீனாவையே விஞ்சிவிடும். மேலும் அமெரிக்காவுக்கே சவாலாக மாறிவிடும் இருக்கும். மேலும் அடுத்த 50 ஆண்டுகளில் முதலாவது இடத்தில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்

முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்

ஆனால் மேற்கூறிய அனைத்தும் நடக்க வேண்டுமெனில் நாம் முதலில் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும். இது எல்லாவற்றையும் விட முதலீடு செய்வோரை ஊக்குவிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டுமெனில் வருமான வரியை ரத்து செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட வருமான வரி, ஜிஎஸ்டியை பார்த்து முதலீட்டாளர்கள் பயப்படாமல் இருக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

மேலும் பிவி நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில், அவரது அமைச்சரவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார். அவர் பதவி வகித்த காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்காக நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி மிகப்பெரிய முட்டாள்தனம்

ஜிஎஸ்டி மிகப்பெரிய முட்டாள்தனம்

இந்த நூற்றாண்டில் ஜிஎஸ்டி வரி என்பது மிகப்பெரிய முட்டாள் தனமானது. மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி குழப்பமானது. அதை யாரும் புரிந்து கொள்ள முடியாது. எந்த படிவத்தை நிரப்புவது என தெரியவில்லை. மேலும் இதை ஆன்லைனில் அப்லோடு செய்ய சொல்கிறார்கள். ராஜஸ்தானின் பார்மர் பகுதியை சேர்ந்த ஒருவர் எங்கள் ஊரில் மின்சாரமே இல்லை. பின் நாங்கள் எப்படி ஜிஎஸ்டி படிவத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது எனக் கேட்டார். நான் முதலில் உன் தலையில் ஏற்று பின்னர் பிரதமர் மோடியிடம் சென்று இதை கூறு என்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+