மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் BSNL தனது பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்து நிதி நிலையை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாவது முறையாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை (VRS) கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், இத்தகவல் BSNL ஊழியர்களை பெரும் சோகத்திற்கு ஆழ்த்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெற, மத்திய தகவல் தொடர்புத் துறை, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை கோரியுள்ளதாக டைம்ஸ்நவ் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டாவது வி.ஆர்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பிஎஸ்என்எல் 1500 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து கோரியுள்ளது. இந்த VRS சுற்றின் மூலம் சுமார் 18,000 முதல் 19,000 பணியாளர்கள் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும், தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறும்.
தற்போது, பிஎஸ்என்எல் நிர்வாகம் ஆண்டுக்கு சுமார் 7500 கோடி ரூபாயை ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிட்டு வருகிறது. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 38% ஆகும். இந்த செலவினத்தைக் குறைத்து ஆண்டுக்கு 5000 கோடி ரூபாயாகக் குறைக்கும் நோக்கில் 2வது முறையாக VRS திட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிர்வாகக் குழு ஊதியச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக வி.ஆர்.எஸ் திட்டத்திற்கு திங்களன்று ஒப்புதல் அளித்தது என டைம்ஸ்நவ் தெரிவித்துள்ள. இதற்கான ஒப்புதலை பெற தற்போது தொலைத்தொடர்பு துறை மத்திய நிதியமைச்சகத்திடம் கேட்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. நாடு முழுவதும் 4ஜி சேவைகளை இன்னும் முழுமையாக அறிமுகம் செய்யாத நிலையிலும், BSNL தொடர்ந்து புதிய வாடிக்கை பெற்று வந்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு செலவுகளை குறைக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
2024-25 நிதியாண்டில், பிஎஸ்என்எல் 21,302 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட சிறிய அளவு மட்டுமே அதிகம். தற்போது நிறுவனத்தில் 30,000-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அல்லாத பணியாளர்களும், 25,000 நிர்வாகப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.
2019 ஆம் ஆண்டில், அரசு பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க 69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் வி.ஆர்.எஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் 93,000 பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications