ஒரு காலத்தில் 22 பில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்பட்ட பைஜூஸ் நிறுவனம் தற்போது சின்னபின்னமாகியுள்ளது. பைஜூஸ் கடந்த ஒரு வருடமாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்த நிலையில் முதல் முறையாக பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் தனது நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். பைஜூஸின் அடிப்படை வணிகம் தற்போது பூஜ்ஜியமாக குறைந்துள்ளதாக பைஜூ ரவீந்திரன் ஒப்புக்கொண்டார்.
எனினும், பைஜூஸின் எதிர்காலம் குறித்து ரவீந்திரன் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். பைஜூஸுக்கு பல துணை நிறுவனங்கள் உள்ளன, அவை தொடர்ந்து வருவாய் ஈட்டுகின்றன, தனது சாம்ராஜ்ஜியத்தின் கோர் பிரிவின் வருவாய் மிகவும் குறைவாக இருந்தாலும், துணை நிறுவனங்கள் வாயிலாக வருடம் 5,000 கோடிக்கும் அதிகமான ஒருங்கிணைந்த வருவாய் ஈட்டி வருவதாகத் தெரிவித்தார். இந்த துணை நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன மற்றும் நன்றாகச் செயல்படுகின்றன.

தற்போதைய சவால்களுக்கிடையே, ரவீந்திரன் பைஜூஸை மீட்டெடுக்க தனது உறுதியை அக்டோபர் 17ஆம் தேதி நடந்த விர்ச்சுவல் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். பைஜூ ரவிந்திரன் தனது பெங்களூர் வீட்டை விட்டு வெளியேறி நீண்ட காலமாக துபாய் வீட்டிலேயே தங்கி பைஜூஸ் நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். நிறுவனம் மூடப்பட்டாலும், அவர் தனது கல்வி முயற்சிகளைத் தொடர வேறு வழிகளைக் கண்டுபிடிப்பேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.
பைஜூஸ் மீண்டும் சந்தைக்கு புதிய அவதாரத்தில் வரும் என்றும், மீண்டும் ஸ்கிராச்சில் இருந்து துவங்கும் என்றும் இந்த சந்திப்பில் பைஜூ ரவீந்திரன் குறிப்பிட்டார், மேலும் பைஜூஸ் நிறுவனர்கள் தொடர்ந்து எட்-டெக் வணிகத்திலேயே இருக்க விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார். இதனால் பைஜூஸ் நிறுவனம் வேறு புதிய அம்சத்துடன் சந்தைக்குத் திரும்பும் என்று அவர் கூறினார்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸின் உரிமையைப் பற்றி பைஜூஸ் ரவீந்திரன் தெளிவுபடுத்தியது, மணிப்பால் குரூப் நிறுவனர் ரஞ்சன் பாய் 40% பங்கை வைத்திருக்கும் நிலையில், மீதமுள்ள 60% பங்கை பைஜூஸ் பிராண்டின் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லர்ன் ப்ரைவேட் லிமிடெட் வைத்துள்ளது.
எனினும், ஆகாஷ் நிறுவனத்தின் பரிவர்த்தனை இன்னும் சில ஒப்பந்த நிலையிலேயே உள்ளது என்றும் பைஜூ ரவிந்திரன் குறிப்பிட்டார். பிளாக்ஸ்டோன் மற்றும் சௌத்ரி குடும்பத்துடன் இறுதி பங்கு பரிமாற்றங்கள் முடிவடைந்த பிறகு, முழு உரிமையாளர் கட்டமைப்பு இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
சௌத்ரி குடும்பம் தற்போது ஆகாஷ் நிறுவனத்தில் 18% பங்கை வைத்திருக்கிறது, அதே சமயம் பிளாக்ஸ்டோன் இன்னும் 12% பங்கை வைத்திருக்கிறது. இந்த பரிவர்த்தனைகள் இறுதி செய்யப்படும்போது, ஆகாஷின் உரிமை அமைப்பு தெளிவாகும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications