இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமாக இருக்கும் BYJU's கொரோனா லாக்டவுன் காலத்தில் குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருந்தது. இக்காலக்கட்டத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள், அதிகப்படியான வருமானம், அதிகப்படியான மதிப்பீடு என அசத்தியது.
ஆனால் இது அனைத்தும் கொரோனா தொற்றுக்கு பின்பு மாறியது என்றால் மிகையில்லை, லாக்டவுன் முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து BYJUs நிறுவனத்தின் வளர்ச்சி தகர்ந்தது, ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பதை விடவும் பள்ளிக்கு சென்று கற்பது தான் பெட்டர் என பெரும்பாலான பெற்றோர்கள் நினைத்த காரணத்தால் BYJUs வாடிக்கையாளர்கள் படை குறைந்தது.

இதனால் BYJUs நிர்வாகம் பல்வேறு செலவுகளை குறைக்க திட்டமிட்டது, இதன்படி அக்டோபர் 2022ல் நிறுவனத்தில் 2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் மார்ச் 2023க்குள் லாபகரமான நிறுவனமாக மாறவும் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தது.
இந்தியாவில் அதிக மதிப்புடைய ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருக்கும் BYJUs ஐபிஓ வெளியிட்டு இந்திய பங்குச்சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பாதையில் செலவுகளை குறைப்பது முக்கியமானதாக இருக்கும் வேளையில் பணிநீக்கத்தை அறிவிக்க துவங்கியது BYJUs நிர்வாகம்.
ஏற்கனவே பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்ட BYJUs நிர்வாகம் தற்போது மீண்டும் பணிநீக்க அறிவிப்பை திங்கட்கிழமை அறிவித்துள்ளது. திங்கட்கிழமை வெளியான அறிவிப்பின் படி BYJUs தனது மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இதன் மூலம் BYJUs நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையான 50000 அளவில் பெரிய அளவிலான மாற்றமில்லை, காரணம் புதிய ஊழியர்களின் சேர்ப்பு ஊழியர்கள் எண்ணிக்கை சரிவை ஈடு செய்துள்ளது.
Byjus நிறுவனம் சமீபத்தில் இந்நிறுவனத்தில் கடன் வழங்கியவர்களுக்குமான பிரச்சனைக்கு பின் 1.2 பில்லியன் டாலர் கடனுக்கு இனி எவ்விதமான தொகையும் செலுத்த வேண்டாம் என்று பைஜூஸ் முடிவு செய்தது இந்திய ஸ்டார்ட்அப் துறையை அதிர்ச்சி அடைய செய்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications