பொதுத்துறை வங்கி நிறுவனமான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, தங்களது 13 சதவீத வங்கி கிளையை மூட இருப்பதாக அறிவித்துள்ளது, பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே நிதி நெருக்கடியில் இயங்கி வரும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 600 வங்கி கிளைகளை மூட உள்ளது.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 4,594 கிளைகளுடன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முடிந்த காலாண்டில் 282 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய போதிலும் 15.16% வாராக் கடன்களைக் கொண்டுள்ளதால் இந்த வங்கி நிதி பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.
வங்கியைச் சீரமைக்கும் நடவடிக்கை
2017-ம் ஆண்டு ஜூன் முதல் இந்த வங்கி வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக நஷ்டம் அடைந்து வந்தது. எனவே இந்த வங்கியைச் சீரமைக்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வந்தது. ஆனால் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை தவிர, அதுனுடன் சேர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கிய அனைத்து வங்கிகளும் சிறப்பாகச் செயல்பட்டு அதிலிருந்து வெளியேறின.
சொத்துக்கள் விற்பனை
நிதி நெருக்கடியை சரி செய்ய வங்கிக்குச் சொந்தமான செயல்படாத சொத்துக்களை விற்று நிதி திரட்டவும் அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் இந்த வங்கியின் நிதி நிலையைச் சரி செய்ய முடியவில்லை.
வங்கிக் கிளைகள் மூடல்
இதனால் வங்கியை மேம்படுத்தும் வகையில் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 600 கிளைகளை மூடுவது அல்லது வேறு வங்கிகளுடன் ஒன்றிணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications