பொதுத்துறை வங்கி நிறுவனமான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, தங்களது 13 சதவீத வங்கி கிளையை மூட இருப்பதாக அறிவித்துள்ளது, பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே நிதி நெருக்கடியில் இயங்கி வரும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 600 வங்கி கிளைகளை மூட உள்ளது.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 4,594 கிளைகளுடன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முடிந்த காலாண்டில் 282 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய போதிலும் 15.16% வாராக் கடன்களைக் கொண்டுள்ளதால் இந்த வங்கி நிதி பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.
வங்கியைச் சீரமைக்கும் நடவடிக்கை
2017-ம் ஆண்டு ஜூன் முதல் இந்த வங்கி வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக நஷ்டம் அடைந்து வந்தது. எனவே இந்த வங்கியைச் சீரமைக்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வந்தது. ஆனால் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை தவிர, அதுனுடன் சேர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கிய அனைத்து வங்கிகளும் சிறப்பாகச் செயல்பட்டு அதிலிருந்து வெளியேறின.
சொத்துக்கள் விற்பனை
நிதி நெருக்கடியை சரி செய்ய வங்கிக்குச் சொந்தமான செயல்படாத சொத்துக்களை விற்று நிதி திரட்டவும் அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் இந்த வங்கியின் நிதி நிலையைச் சரி செய்ய முடியவில்லை.
வங்கிக் கிளைகள் மூடல்
இதனால் வங்கியை மேம்படுத்தும் வகையில் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 600 கிளைகளை மூடுவது அல்லது வேறு வங்கிகளுடன் ஒன்றிணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications