மத்திய நிதியமைச்சகம் : கருப்பு பணத்தை ஒழிக்க கட்டுப்பாடு.. தப்பித்தவறி கூட மாட்டிக்காதீங்க!

இந்தியாவில் பணமோசடி தடுப்பு சட்டத்தை கடுமையாக்கும் வகையில், மத்திய அரசு தற்போது தணிக்கையாளர்கள், செலவு கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்களை பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் கொண்டு வந்துள்ளது.

இதுக்குறித்த பேச்சுவார்த்தை, ஆலோசனை பல மாதங்களாக செய்யப்பட்டு வந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் தணிக்கையாளர்கள், செலவு கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் ஆகியோர் PMLA சட்டத்தின் கீழ் கொண்டு வருவதாக மே 3 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு உள்ளளது.

மத்திய நிதியமைச்சகம் : கருப்பு பணத்தை ஒழிக்க கட்டுப்பாடு.. தப்பித்தவறி கூட மாட்டிக்காதீங்க!

மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின் படி CA, CS மற்றும் செலவு கணக்காளர்கள் ஐந்து குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளுக்கு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த 5 குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகள் என்ன..? வாங்க விரிவாக பார்ப்போம்.

நிதி அமைச்சக அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள ஐந்து நிதி பரிவர்த்தனைகள் - அசையாச் சொத்தை வாங்குதல் மற்றும் விற்பது; வாடிக்கையாளர் பணம், பத்திரங்கள் அல்லது பிற சொத்துக்களை நிர்வகித்தல்; வங்கி, சேமிப்பு அல்லது பத்திர கணக்குகளின் மேலாண்மை; நிறுவனங்களின் உருவாக்கம், செயல்பாடு அல்லது மேலாண்மைக்கான பங்களிப்பு; நிறுவனங்களின் உருவாக்கம், செயல்பாடு அல்லது மேலாண்மை, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கொண்ட கூட்டாண்மை அல்லது அறக்கட்டளைகள், வணிக நிறுவனங்களை வாங்குதல் மற்றும் விற்பது ஆகியவை அடங்கும்.

மத்திய நிதியமைச்சகம் : கருப்பு பணத்தை ஒழிக்க கட்டுப்பாடு.. தப்பித்தவறி கூட மாட்டிக்காதீங்க!

இதுக்குறித்து இந்திய சார்ட்டட் அக்கவுண்ட் இன்ஸ்டியூட் (ICAI) கூறுகையில் இந்த 5 நிதி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளை அரசுக்கு தெரிவிக்கும் ஒரு ரிப்போர்ட்டிங் முனையமாக தணிக்கையாளர்கள் மாறியுள்ளனர்.

ஒரு ரிப்போர்ட்டிங் முனையமாக மாறிவிட்ட நிலையில் தணிக்கையாளர்கள் அவர்கள் நிர்வாகம் செய்யும் கிளையின்ட் அதாவது நிறுவனங்கள் மேலே உள்ள 5 பிரிவு பரிவர்த்தனைகளில் நுழையும் அனைத்து வாடிக்கையாளர்களின் KYC செய்ய வேண்டும் மற்றும் அதன் பதிவைப் பராமரிக்க வேண்டும் என்று ICAI அனைத்து தணிக்கையாளர்கள், செலவு கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் : கருப்பு பணத்தை ஒழிக்க கட்டுப்பாடு.. தப்பித்தவறி கூட மாட்டிக்காதீங்க!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த சில மாதங்களாக கருப்புப் பணத்தை ஒழிக்க PMLA விதிகளை கடுமையாக்குகிறது. மார்ச் மாதம், நிதி அமைச்சகம் PMLA இன் கீழ் சில முக்கிய விதிகளை திருத்தியது. இதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசியல் ரீதியாக வெளிப்படும் நபர்களின் (PEP) நிதி பரிவர்த்தனைகளை தனிப்பட்ட முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மார்ச் மாதத்திற்கு முன்பு PMLA இன் கீழ் லாபம் நோக்கற்ற நிறுவனங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை சேகரிக்க நிதி நிறுவனங்களை கட்டாயப்படுத்தப்பட்டன. இதன் மூலம் கருப்பு பணம் கட்டுப்படுத்தப்பட உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+