கடவுள் இருக்கான் குமாரு.. இன்ஸ்டாகிராமில் 81 வயது சென்னை பாட்டிக்கு 5 லட்சம் பாலோயர்ஸ்..!

யாருக்கும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாது. சமூக ஊடக தளங்களில் பாலோயர்ஸ் பெற பல இளைஞர்கள் கடுமையாக முயற்சி செய்கின்றனர் ஆனால் சிலர் ஒரே இரவில் பிரபலமாகி லட்சக்கணக்கான பாலோயர்ஸை பெற்று வருகின்றனர். அப்படி இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய சில நாட்களிலேயே 5 லட்சம் பாலோயர்ஸை பெற்றுள்ளார் 81 வயதான சென்னையை சேர்ந்த மெர்லின் பாட்டி. அதேசமயம் அவரது கதையை கேட்டால் கல் நெஞ்சும் கரைந்து விடும்.

மியான்மரை சேர்ந்த மெர்லின் பல தசாப்தங்கள் முன்பு இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இந்தியா வந்து சென்னையில் செட்டிலானார். இந்தியாவில் சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்று கனவுகளுடன் வந்த மெர்லினுக்கு ஆரம்பத்தில் வாழ்க்கை இன்பமயமாக தான் கழிந்தது.

கடவுள் இருக்கான் குமாரு.. இன்ஸ்டாகிராமில் 81 வயது சென்னை பாட்டிக்கு 5 லட்சம் பாலோயர்ஸ்..!

ஆனால் அதன் பிறகு அவரது வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக புயல் வீசியது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக காலமாகினர். இதனால் மெர்லினுக்கு உறவினர்கள் இல்லாமல் போனார்கள். மேலும் ஒரு கட்டத்தில் பிச்சை எடுத்து வாழ்க்கையை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக சென்னை தெருக்களில் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் வீடியோ கிரியேட்டரான முகமது ஆஷிக் என்பவர் தற்செயலாக 81 வயதான மெர்லின் பாட்டியை சந்திக்கிறார். இந்த சந்திப்பு தனது வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதை மெர்லின் பாட்டி உணர்ந்திருக்க மாட்டார். ஆஷிக் முகமது-ன் டியூஷன் டீச்சர் தான் மெர்லின் பாட்டி, அவர் இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன் எவ்விதமான தயக்கமுமின்றி பேசினார்.

அப்போது முகமது ஆஷிக்கிடம் தனது கஷ்டத்தை மெர்லின் பாட்டி தெரிவித்தார். பலரிடம் உணவுக்காக நான் கெஞ்சுகிறேன், சில நேரங்களில் நான் பிச்சை பெறுகிறேன், சில நேரங்களில் கிடைக்காது அப்போது நான் பட்டினி கிடக்க வேண்டும் என்று மெர்லின் பாட்டி தெரிவித்தார்.

மேலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய தகவலையும் முகமது ஆஷிக்கிடம் மெர்லின் பாட்டி தெரிவித்தார். முகமது ஆஷிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெர்லின் பாட்டியுடன் கலந்துரையாடிய வீடியோவை பகிர்ந்தார்.

அந்த வீடியோ ஒரே நாள் இரவில் வைரலானது. இதனையடுத்து மெர்லின் பாட்டிக்கு ஏதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முகமது ஆஷிக் இன்ஸ்டாகிராமில் மெர்லினுக்காக இங்கிலிஷ் வித் மெர்லின் என்ற கணக்கை தொடங்கினார். நான்கே நாட்களில் இன்ஸ்டாகிராமில் மெர்லினை 5 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.

தற்போது உலகம் முழுவதில் இருந்தும் பலர் மெர்லின் பாட்டிக்கு உதவி செய்து வருகின்றனர். மெர்லின் பாட்டி தற்போது ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார். அங்கு அவர் மரியாதைக்குரிய மற்றும் கண்ணியமான வாழ்க்கையை நடத்த முடியும். மேலும், மெர்லின் ஆங்கிலம் கற்றல் தொடர்பான வீடியோக்களை உருவாக்க உள்ளார். அதனை வெளியிட்டு, அதற்காக மெர்லின் பாட்டிக்கு பணம் கொடுக்க உள்ளதாக முகமது ஆஷிக் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+