இணையதளம் கண்டிப்பாக ஒரு பாதுகாப்பான சேவைதான். ஆனால் அதில் மனிதர்கள் எளிய இலக்காக மாறிவிடுகிறார்கள். அதனால் பல மோசடிகள் நடைபெறும் இடமாக அல்லது சேவையாக ஆன்லைன் மாறிவிட்டது.
அண்மையில் சீனாவில் நடைபெறும் டாப் 5 மோசடிகள் பட்டியலை அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது.
பிரஷிங்
இ-காமர்ஸ் இணையதளம் ஒன்று தொடங்குவது. அதில் குறைந்த விலையில் பல பொருட்களைப் பட்டியலிடுவது. ஆன்லைனில் பணத்தை பெறுவது. பின்னர் அந்த பொருளை டெலிவரி செய்யாமல் ஏமாற்றுவது அல்லது பல்வேறு மோசடி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய சொல்லி வாடிக்கையாளர்களை வற்புறுத்துவது.
தவறான முதலீடு
அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஒரு முதலீடு திட்டம் பற்றி கூறுவது. அதில் பல பேர் முதலீடு செய்த உடன் மொத்த பணத்தையும் ஏமாற்றிக்கொண்டு ஓடுவது.
ஏமாற்று கடன் திட்டங்கள்
உடனடி கடன் கொடுப்பது, கடன் வாங்கிய பிறகு அதிக வட்டி வசூலிப்பது, கட்ட முடியாமல் போகும் போது வாங்கியவர்களை மிரட்டுவது.
வாடிக்கையாளர் சேவை ஆள்மாறாட்டம்
வாடிக்கையாளர் சேவை நிறுவனம் போல பொருட்களை வாங்குவது, பின்னர் கடனுக்குப் பொருட்களை வாங்குவது. ஒரேயடியாக பலபேரிடம் பொருட்களை வாங்கிவிட்டு ஏமாற்றிவிடுவது.
இந்தியா
மேலே கூறியது போன்று இந்தியாவில் பல மோசடிகள் நடக்கிறது. இப்படி அதிக மோசடி நடைபெறும் நகரமாக தெலுங்கானாவின் ஹைதராபாத் உள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 50,035 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகி உள்ளன. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 11.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
வங்கி மோசடிகள்
இந்தியாவில் அதிகம் இப்போது நடப்பது ஆன்லைன் வங்கி மோசடிகளாக உள்ளன. ஓடிபி மோசடிகள், டெபிட் / கிரெடிட் கார்டு மோசடிகள், ஏடிஎம் மோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்த மோசடிகளை தவிர்க இந்திய வங்கி நிறுவனங்களும் பல்வேறு வகையில் வாடிக்கையாளர்களை எச்சரிக்கின்றன. இருந்தாலும் இதுபோன்ற புகார்கள் குறைந்தபாடில்லை.
பிற மோசடிகள்
இவை தவிர, சைபர் குற்றவாளிகள் ஒரே எண்ணில் இரண்டு சிம் கார்டு, ஏமாற்றுதல், தரவு மீறல், சேவை மறுப்பு, வைரஸ், ரேன்சம்வேர் என பல பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
நீங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைத்தால், உடனே உங்கள் கடவுச்சொற்கள் அனைத்தையும் மாற்றி, சந்தேகத்திற்குரிய மென்பொருளை நீக்கவும். தேவையற்ற கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக கிரெடிட் கார்டு நிறுவனத்தை அழைக்கவும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆன்லைன் மோசடிகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications