சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்க கூடிய கடன் செயலிகள் மற்றும் முதலீட்டு டோக்கன்களுக்கு எதிராக அமலாக்க துறை பல இடங்களில் சோதனை நடத்தியது.
அமலாக்க துறை Easebuzz, Razorpay, Cashfree மற்றும் Paytm ஆகிய முன்னணி பேமெண்ட் சேவை மற்றும் பேமெண்ட் கேட்வே நிறுவனங்களில் வைத்திருந்த ரூ.46.67 கோடி மதிப்புள்ள பணத்தை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அமலாக்க இயக்குனரகம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நிதி முடக்கப்பட்டுள்ளது.
கடன் மோசடி
இந்தியாவில் கடன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முதல் கட்ட ஆலோசனை மற்றும் ஆய்வில் பெரும்பாலான இந்தக் கடன் செயலிகளை இணைய வாயிலாகச் சீன நிறுவனங்களும், சீனர்களும் இந்தியாவில் நடத்தி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டது.
சீன செயலிகள்
இந்த நிலையில் சீன செயலிகளுக்குத் தொடர்புடைய செயலிகளின் பணத்தை முடக்க அமலாக்க துறை டிஜிட்டல் பேமெண்ட் சேவை அளிக்கும் இந்திய நிறுவனங்களான Easebuzz, Razorpay, Cashfree மற்றும் Paytm ஆகிய நிறுவனங்களில் அமலாக்க சோதனை நடத்தி தற்போது 46.67 கோடி ரூபாய் அளவிலான நிதியை முடக்கியுள்ளது.
செப்டம்பர் 14
இந்தக் கடன் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாகக் கூறப்படுபவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான டெல்லி, மும்பை, காசியாபாத், லக்னோ மற்றும் கயா ஆகிய இடங்களில் செப்டம்பர் 14 ஆம் தேதி சோதனைகள் தொடங்கப்பட்டன.
சீன கடன் செயலி
இதைத் தொடர்ந்து சீன கடன் செயலி மற்றும் HPZ எனப்படும் மொபைல் செயலி அடிப்படையிலான டோக்கன்-கள் தொடர்பாக டெல்லி, குருகிராம், மும்பை, புனே, சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் பெங்களூரு பகுதிகளில் சுமார் 16 வங்கிகள் மற்றும் பேமெண்ட் கேட்வே நிறுவனங்களில் சோதனை செய்யப்பட்டது.
நாகாலாந்து வழக்கு
இந்தச் சோதனைக்கு அடிப்படையாகத் துவங்கியது 2021 அக்டோபரில் நாகாலாந்தில் உள்ள கோஹிமா காவல்துறையின் பணமோசடி தொடர்பாகச் சைபர் கிரைம் பிரிவால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தான்.
46 கோடி ரூபாய் பணம்
அமலாக்க துறையின் இந்தச் சோதனையில் புனேவில் உள்ள ஈஸ்பஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ரூ.33.36 கோடியும், பெங்களூரில் உள்ள ரேஸர்பே சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ரூ.8.21 கோடியும், பெங்களூரில் உள்ள கேஷ்ஃப்ரீ பேமெண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.1.28 கோடியும், டெல்லியில் உள்ள பேடிஎம் பேமெண்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ரூ.1.11 கோடியும் முடக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications