டிரம்ப்-ன் மிரட்டல்.. ஆண்டுக்கு 700 கோடி டாலர் இழப்பை சந்திக்க போகும் இந்தியா..

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றுகையில், மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக நமக்கு எதிராக அதிக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது நமது முறை. அந்த மற்ற நாடுகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்த வேண்டும். ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட அதிகமாக வரிகளை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.

இந்தியா நம்மிடம் 100 சதவீதத்துக்கும் அதிகமாக வாகன வரியை வசூலிக்கிறது. ஏப்ரல் 2 முதல் இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுளின் பொருட்கள் மீது அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

டிரம்பின் பரஸ்பர வரி மிரட்டல்..   ஆண்டுக்கு 700 கோடி டாலர் இழப்பை சந்திக்க போகும் இந்தியா..

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஏற்கனவே அமெரிக்க வரிகளை எதிர்கொண்டுள்ளன. அதேசமயம் இதுவரை டிரம்பின் வரி விதிப்பு இலக்கில் இருந்து இந்தியா தப்பித்தது. ஆனால் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து இந்தியா தப்ப முடியாது.

ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற டிரம்பின் மிரட்டலால், இந்தியாவின் வாகனம் முதல் விவசாயம் வரையிலான ஏற்றுமதி துறைகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 700 கோடி டாலர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிட்டி ரிசர்ச் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கடந்த 2024ம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுக்கு 7,400 கோடி டாலர் மதிப்புக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளுக்கு சராசரியாக 11 சதவீதம் வரியை இந்தியா விதித்தது. இது இந்திய ஏற்றுமதிகளில் அமெரிக்க வரிகளை விட சுமார் 8.2 சதவீதம் அதிகமாகும் என்று சிட்டி மதிப்பீடுகள் காட்டுகின்றன. அமெரிக்கா பரஸ்பர வரிகளை அமல்படுத்தினால், 2026ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 200 கோடி டாலர் சரிவடையும் என்று கடந்த வாரம் இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் தெரிவித்தது.

டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பின் தீவிரத்தை உணர்ந்த, இந்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் மார்ச் 8ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த சந்திப்புகளை ரத்து செய்து விட்டு, அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றார். அங்கு அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜேமிசன் கிரீனரைச் சந்தித்து பேசினார். இந்த பயணத்தின்போது, இந்தியாவின் மீதான தாக்கத்தை மதிப்பிடுவதற்காக அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தெளிவுப்படுத்த கோயல் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட தொழில்துறை தயாரிப்புகளுக்கான வரிக் குறைப்புகளை பற்றி பேச இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால் விவசாய பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதை இந்தியா எதிர்க்கிறது. ஏனென்றால் வரி குறைத்தால் லட்சக்கணக்கான ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை இதற்கு காரணம்.

வர்த்தக பதற்றத்தை தணிக்க, இந்தியா ஏற்கனவே பல பொருட்களின் மீதான வரிகளை குறைத்துள்ளது. உதாரணமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்ரக மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும், போர்பன் விஸ்கி மீதான வரியை 150 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாகவும் இந்தியா குறைத்துள்ளது. இதுதவிர,மற்ற வரிகளை பரிசீலனை செய்வதாகவும், எரிசக்தி இறக்குமதியை அதிகரிப்பதாகவும், மேலும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதாகவும் அமெரிக்காவிடம் இந்தியா உறுதியளித்துள்ளது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+