செங்கல்பட்டு: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் நிறுவனத்தின் பல் பொருள் உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். இந்த ஆலை மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட கிரீன் பீல்ட் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆலை 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் லிமிடெட் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலையாக இரு பார்க்கப்படுகிறது. இந்த ஆலை அமைப்பதற்காக கோத்ரேஜ் நிறுவனம் 515 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

13 மாதங்களுக்கு முன்புதான் இந்த ஆலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆலை மூலம் 1110 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் பெண்கள் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இங்கே வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆலையை திறந்து வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கோத்ரேஜ் உற்பத்தி ஆலையில் 50 சதவீத வேலை வாய்ப்பு பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ஆலை அமைப்பதற்காக அரசுக்கும் கோத்ரேஜ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்றும் 2024 ஜனவரி மாதம் இந்த ஆலையை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது என்றும் தெரிவித்தார்.
13 மாதங்களிலேயே இந்த திட்டம் முடிக்கப்பட்டுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார். ஒரு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதில் இருந்து அது வெற்றிகரமாக பயன்பாட்டிற்கு வரும் வரை திராவிட மாடல் அரசு எவ்வளவு பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என தெரிவித்தார். தமிழ்நாடு மாநிலம் பொருளாதார ரீதியாக மட்டும் வளர்ச்சி அடைவது கிடையாது அனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்யும் சமூக நீதியை உறுதிப்படுத்துகிறது என தெரிவித்தார்.
செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் கோத்ரேஜ் நிறுவனத்திற்கான சோப்புகள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் ,கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. முதலமைச்சர் இந்த ஆலையை திறந்து வைத்தவுடன் முதன் முறையாக சிந்தால் சோப் பார் உற்பத்தி செய்யப்பட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

முதல்வர் ஸ்டாலினின் அடுத்த சர்ப்பிரைஸ்!! 37 லட்சம் பேருக்கு ரூ.2000 சிறப்பு நிதி!! யாருக்கெல்லாம் கிடைத்தது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications