ஜிஎஸ்டி-க்கு மூடுவிழா? ஜிஎஸ்டி 2.0 வருகிறது.. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதி..!

காங்கிரஸ் கட்சி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையை ஏப்ரல் 5-ஆம் தேதி (இன்று) வெளியிட்டது. ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி. வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியீட்டின் போது உடனிருந்தனர்.

இம்முறை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 'நியா பத்ரா' என்ற அடை மொழியுடன் வந்தது "நியா" என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், இது நீதி, அனைவருக்கும் சமத்துவம் என்ற பொருள் உடையது. "பத்ரா" என்பது ஒரு பெயர்ச்சொல், அதாவது ஒரு நபர் அல்லது அமைப்பைக் குறிக்கும் சொல். அனைவருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி, சமத்துவம் என்பதைதான் குறிக்கிறது.

ஜிஎஸ்டி-க்கு மூடுவிழா? ஜிஎஸ்டி 2.0 வருகிறது.. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதி..!

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விட முக்கியமாக ஜிஎஸ்டி குறித்த அறிவிப்பு பெரும் தாக்கத்தை வர்த்தக சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில், பிஜேபி / என்டிஏ அரசாங்கத்தால் இயற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டங்களை ஜிஎஸ்டி 2.0 உடன் காங்கிரஸ் மாற்றும்.

காங்கிரஸ் அமலாக்கம் செய்யப்பட்டும் புதிய ஜிஎஸ்டி முறையில், ஜிஎஸ்டி என்பது ஏழைகளுக்குச் சுமையை ஏற்படுத்தாத ஒன்றாக இருக்கும், மிதமான வட்டி விகிதம் (சில விதிவிலக்குகளுடன்) அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கையின் அடிப்படையில் அமையும். விவசாயத்துறை உள்ளீடுகள் ஜிஎஸ்டி விதிக்கப்படாது அதாவது agricultural inputs-க்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விவசாய உள்ளீடுகள் என்பது விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மின்சாரம், கால்நடை மருந்துகள், உபகரணங்கள், கால்நடை தீவனம் மற்றும் பதப்படுத்தும் ஆலைகள் போன்ற பண்ணை பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வளங்கள் ஆகும்.

ஜிஎஸ்டி சட்டங்களின் நிர்வாகம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சரி சமமாக பிரிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே உள்ள சிறிய ஜிஎஸ்டி செலுத்துபவர்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிற்கு வருவார்கள்.

ஜிஎஸ்டி வருவாயில் ஒரு பகுதி பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் கடைக்காரர்கள் மற்றும் சிறு சில்லறை வணிகங்களுக்குக் குறிப்பிடத்தக்க வரி விலக்கு அளிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி காலம் முழுவதும் நிலையான தனிநபர் வருமான வரி விகிதங்களை நடைமுறையில் வைத்திருக்கும், ஒவ்வொரு வருடமும் மாற்றங்களைச் செய்யாது. இதன் மூலம் மாத சம்பளம் பெறும் மக்கள் உயரும் வரி விகிதங்களின் குழப்பத்தில் சிக்காமல் மீடியோம் முதல் லாங்க டர்ம் முறையில் அவர்களின் நிதிநிலையைத் தெளிவாகத் திட்டமிட உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+