இந்தியாவின் முதல் கொரோனா தொற்று அலையின் போது எவ்விதமான முன்னேற்பாடும் இல்லாமல் எதிர்வினைகளை யோசிக்காமல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட பிரிவுகளில் வங்கி மிகவும் முக்கியமானது, வங்கிகள் இன்றைய நாள் வரையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வங்கிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான்
இந்தியாவின் முக்கியமான நகரங்களில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் வங்கிகளின் நிதி மதிப்பீட்டுக்கு மீண்டும் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது. கொரோனா அலை பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வராத நிலையில் தற்போது உருவாகியிருக்கும் 3வது கொரோனா அலையில் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் மறுசீரமைப்பு
இந்திய வங்கிகள் கடன் மறுசீரமைப்புச் செய்ய விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. கொரோனா-வை போல் ஒமிக்ரான் வைரஸ் உயிர் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கணிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் லாக்டவுன் மற்றும் வர்த்தக நேர கட்டுப்பாடுகள் வங்கிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3வது அலை
இதேவேளையில் 3வது அலையில் மோடோரோரியம் அதாவது கடன் சலுகை கொடுக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. இது 2வது அலையின் போது வங்கிகள் எடுத்த முடிவின் மூலம் உறுதியாகியுள்ளது.
முதல் கொரோனா தொற்று அலை
முதல் கொரோனா தொற்று அலையின் போது வர்த்தகம் மற்றும் வருமானத்தை இழந்த பல லட்சம் நிறுவனங்கள் கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது. இதனால் வங்கிகளில் வாராக் கடன் அளவு அதிகரித்து வங்கியின் நிதிநிலை மிகவும் மோசமானது.
கடன் சலுகை
இதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களுக்கு மோரோடோரியம் அதாவது கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதில் 6 மாதம் சலுகை அளித்தது.
இந்த மோரோடோரியம் மூலம் வங்கிகளுக்கு 6 மாத வட்டி வருமானமும் இழந்தது.
2வது கொரோனா அலை
2வது கொரோனா அலையில் மோரோடோரியம் போன்றவற்றை அளிக்காமல் கடன் மறுசீரமைப்பு, கடனை செலுத்த முடியாத வர்த்தகக் கடன் கணக்குகளுக்குக் கூடுதலான கடனை கொடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது போன்ற நடவடிக்கையை எடுத்தது.
இதில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைச் சிறு நிறுவனங்களை விடவும் பெரு நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தியது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications