சாயங்காலம் வேலைக்கு நடுவில் எடுக்கும் ப்ரேக்கில் ஒரு டீ, சூடா மசால் வடை சாப்பிடுவது பல லட்சம் மக்களின் வாடிக்கையாக இருக்கும், ஆனால் உஷாராக இருப்பது மிகவும் அவசியமாகியுள்ளது.
மாங்கு மாங்கென்று வேலை செய்து பணத்தைச் சேர்ப்பதைக் காட்டிலும் உடல்நலத்தைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் எனக் கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடமாக உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பயன்படுத்திய சமையல் எண்ணெய்-ஐ மீண்டும் பயன்படுத்துவது குறித்த ஒரு ஆய்வை இந்திய திங்க் டேங்க் அமைப்பான Observer Research Foundation (ORF) செய்துள்ளது.
இதில் பல முக்கியமான விஷயங்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் இனி நமக்குப் பிடித்த மசால் வடை, மெது வடை, சமோசா போன்றவற்றைக் கூடப் பார்த்து பார்த்து தான் சாப்பிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பயன்படுத்திய சமையல் எண்ணெய்
பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை (யுசிஓ) எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என்ற தடை உத்தரவு உணவு பாதுகாப்பு விதிமுறைகளில் இருந்தபோதிலும், இந்தியாவில் கிட்டத்தட்ட 60% பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உணவு சங்கிலியில் திரும்புகிறது என்று அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) அறிக்கை கூறுகிறது.
மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா
இந்தியாவில் மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு பெருநகரங்களில் உள்ள 505 க்கும் மேற்பட்ட உணவு வணிக ஆப்ரேட்டர்களின் (FBOs) கணக்கெடுப்பின் அடிப்படையில், இதில் 101 பெரிய அளவிலானவர்கள் மற்றும் 406 பேர் சிறிய அளவிலான கடைகளை வைத்துள்ளனர்.
புற்றுநோய், இதய நோய், உறுப்புச் சேதம்
விரிவான மருத்துவ மற்றும் அறிவியல் தரவுகள் படி புற்றுநோய், இதய நோய் மற்றும் உறுப்புச் சேதம் உள்ளிட்ட பல நோய்களும் ஏற்பட ஆபத்துக் காரணியாகப் பயன்படுத்திய சமையல் எண்ணெயை (யுசிஓ) பயன்படுத்திச் சமைத்த உணவுகளை உட்கொள்வதைத் தொடர்புடையது என்று ORF அறிக்கை கூறுகிறது.
உணவகங்கள்
இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் உணவகங்கள் குறிப்பாகச் சிறிய கடைகள், பயன்படுத்திய சமையல் எண்ணெயை திரும்பத் திரும்பப் பயன்படுத்திக் கடைசிச் சொட்டு வரையில் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது. குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் இருக்கும் சாலை வியாபாரிகள் அதிகளவில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை உபயோகிப்பதாகக் கூறுகிறது இந்த ஆய்வு.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications