இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் புகுந்து விட்டது. தொழில்நுட்பம் மக்களின் பயணத்தை வசதியாகவும், எளிமையாகவும் மாற்ற உதவியது. அதேபோல் உலகின் எந்த பகுதிக்கும் சரக்குகளை அனுப்புவதையும் அது சாத்தியமாக்கியுள்ளது. அடுக்கமாடி குடியிருப்பில் இ காமர்ஸ் கூரியர் சேவையாக தொடங்கிய டெல்லிவரி (Delhivery) நிறுவனம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான உருவெடுத்துள்ளது.
2011ல் நண்பர்களான சாஹில் பருவா, மோஹித் டாண்டன், பவேஷ் மங்லானி மற்றும் கபில் பாரதி ஆகியோர் Delhivery நிறுவனத்தை தொடங்கினர். இதில் சாஹில் பருவா கர்நாடகாவில் உள்ள என்.ஐ.டி.யில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். அதை தொடர்ந்து ஐ.ஐ.எம். பெங்களூருவில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

பின்பு 2005ல் மேரிலாந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற பிறகு CALCE ஆய்வகங்களில் ஆராய்ச்சி பயிற்சியாளராக 4 மாதங்கள் பணியாற்றினார். அதன் பிறகு 2007ல் Stayglad நிறுவனத்தில் பணியாற்றினார். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு முன், கடைசியாக பெயின் அண்ட் கம்பெனியில் அசோசியேட் ஆலோசகராக இருந்தார்.
2011ல் சாஹில் பருவா தனது நண்பர்களுடன் இணைந்து தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இ காமர்ஸ் கூரியர் சேவையாக டெல்லிவரி நிறுவனத்தை தொடங்கினார். அந்த கால கட்டத்தில், பல வர்த்தக நிறுவனங்கள் இ காமர்ஸ் வணிகங்களுக்கு விநியோக சேவைகளை வழங்கவில்லை. இருப்பினும் இந்நிறுவனம் தொடங்கிய 2 ஆண்டுகளுக்கு பிறகு மளிகை மற்றும் பேஷன் சில்லறை விற்பனை சந்தைகளில் களம் இறங்கியது.
இதனையடுத்து பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய நிறுவனங்களுடன் கை கோர்த்தனர். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அவர்களின் பொருட்களை டெலிவரி செய்தனர். இது அவர்களின் (பிளிப்கார்ட், அமேசான்) வழக்கமான டெலிவரி நேரத்தை விட மிக வேகமாக இருந்தது. மேலும் குறைந்தவிலையில் இன்டர்நெட் சேவை கிடைத்தால் மக்கள் நடத்தையில் மாற்றம் (ஆன்லைனில் ஆர்டர் செய்வது) ஏற்பட்டது. இதன் விளைவாக வீட்டு டெலிவரிக்கான தேவை அதிகரித்தது. அவர்களின் வர்த்தகமும் வளர்ந்தது.
2023 நவம்பர் 11 நிலவரப்படி, டெல்லிவரியின் சந்தை மூலதனம் ரூ.30,054 கோடியாக உள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாஹில் பருவா, வணிகத்தை மீட்பதிலும் அதை முன்னோக்கி கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். 2023ம் நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.7,225 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக சாஹில் பருவா மாதம் ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார். அதாவது ஆண்டுக்கு ரூ.3.1 கோடி ஊதியம் பெற்றுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications