சென்னை: 2023-2024 நிதியாண்டில், கிட்டத்தட்ட 3.7 கோடி டீமேட் கணக்குகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச கணக்குகள் எண்ணிக்கை இது. சராசரியாக, ஒவ்வொரு மாதமும் 30 லட்சத்திற்கும் அதிகமான டீமேட் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன, பெரும்பாலும் சந்தை ஏற்றம் காரணமாக இந்த அதிகரிப்பு இருக்கலாம்.
மத்திய டெபாசிட்டரி சர்வீசஸ் (சிடிஎஸ்எல்) மற்றும் நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட்டரி (என்எஸ்டிஎல்) ஆகிய இரண்டு டெபாசிட்டரிகளில் திறக்கப்பட்ட டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட 11.9 சதவீதம் அதிகரித்து, 114.5 கோடியில் இருந்து 151.4 கோடியை எட்டியது.

இந்த எழுச்சி பங்குச்சந்தை முதலீடு அதிகரித்து வருவதை காட்டுவது மட்டுமல்லாமல், நிதிச் சந்தைகளில் தனிநபர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையும் பிரதிபலிக்கிறது. இளம் வயதினர் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதும், இதற்கு ஒரு காரணியாக அமைகிறது.
FY24 இன் போது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 முறையே 24.85 சதவீதம் மற்றும் 28.61 சதவீதம் உயர்ந்தது, அதே நேரத்தில் பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் 63.4 சதவீதம் மற்றும் 60 சதவீதம் உயர்ந்தன.
ஜிடிஎஃப்சி செக்யூரிட்டிஸின் ரீடைல் ஆராய்ச்சித் தலைவர் தீபக் ஜசானி, டிமேட் கணக்குகளின் அதிகரிப்பு பல காரணங்களால் ஏற்படுகிறது என்று கூறுகிறார். முதலாவதாக, சந்தையின் வளர்ச்சி, குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள் பலர் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இரண்டாவதாக, ஈக்விட்டிகள் வளர்ந்து வரும் மற்றும் பிரபலமாக இருப்பதால், அவற்றின் அதிக வருமானத்தால் உந்தப்பட்டு, பங்குகளில் முதலீடு செய்ய அதிகமான மக்கள் ஆரம்பித்துள்ளனர். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் நேரடி முதலீடுகள் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானம் பெற்று தரும் என மக்கள் நம்புகின்றனர்.
மேலும், புதிய தரகர்கள் மற்றும் தள்ளுபடி தரகர்கள் தங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பதும் இந்த உயரத்திற்கு பங்களிக்கிறது.
கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் உலகளாவிய மற்றும் வளர்ந்து வரும் சந்தை பங்குகளை விட, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்திய பங்குகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளதால், முதலீட்டாளர்களிடையே இந்திய பங்குகள் மீதான ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சி அமெரிக்க சந்தையுடன் ஒப்பிடுகையில் மிகவும் பரவலாக உள்ளது. மேலும், முந்தைய நிதி ஆண்டில் 1 டிரில்லியன் மிட்கேப் 48ல் இருந்து 80 ஆக உயர்ந்தது. இது முதலீட்டாளர்களின் ஆர்வத்தை உயர்த்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட நடுத்தர நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.
உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகின்றனர்,இந்த ஆர்வம் நாட்டின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி, நேர்மறையான மேக்ரோ பொருளாதார நிலைமைகள், தேர்தல் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் நிதி வழிகளில் தங்கள் பணத்தைச் சேமிக்கத் தேர்ந்தெடுக்கும் அதிகமான மக்களின் போக்கு போன்ற காரணங்களினால் ஏற்பட்டுள்ளது எனலாம். எனவே, உங்களின் சுய விருபத்தில் தக்க ஆலோசனையுடன் முதலீடு செய்யவும்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications