சென்னை: இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் முறைசாரா துறை அதாவது informal sector-ல் சுமார் 16.45 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASUSE) அறிக்கை தெரிவிக்கிறது.
2015-16ம் ஆண்டில் நாட்டின் முறைசாரா துறைகளில் பணியாற்றியோர் எண்ணிக்கை 11.13 கோடியாக இருந்த நிலையில், 2022-23ம் ஆண்டில் 10.96 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் இக்காலகட்டத்தில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2015-16ம் ஆண்டு முதல் முறைசாரா துறையின் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளைக் கண்காணித்து வருகிறது. இந்த தரவுகளைத் திரட்ட முக்கிய காரணமாக அமைந்தது 3 விஷயங்கள்.
2016ம் ஆண்டு நவம்பரில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு, 2017ம் ஆண்டு ஜூலையில் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி, 2020ம் ஆண்டு மார்ச்சில் தொடங்கிய கொரோனா தொற்று உள்ளிட்ட காரணிகளால் முறைசாரா துறைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இதன் காரணமாகவே வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளதைத் தான் இந்த புள்ளி விவரங்கள் நமக்குக் கூறுகிறது.
இந்த காலகட்டத்தில் முறைசாரா துறையில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 6.33 கோடியிலிருந்து 6.50 கோடியாக அதிகரித்துள்ளது, ஆனாலும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 16.45 லட்சம் குறைந்து 11.13 கோடி வேலைவாய்ப்புகளிலிருந்து 10.96 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
முறைசாரா துறையில் பணியாற்றும் 75 சதவீத பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மகாராஷ்டிரா, பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஆனால், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் மொத்த தொழிலாளர்களில் 42 சதவீதம் பேர் உள்ளனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) முறைசாரா துறைகளின் பங்கு 44 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மேலும், விவசாயம் அல்லாத துறைகளில் பணியாற்றும் 75 சதவீத தொழிலாளர்கள் இந்த துறைகளிலேயே பணிபுரிகின்றனர்.
மத்திய புள்ளி விவரத் துறை அமைச்சகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிட்டுள்ள முறைசாரா துறைகள் பற்றிய புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications