சென்னை: இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் முறைசாரா துறை அதாவது informal sector-ல் சுமார் 16.45 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASUSE) அறிக்கை தெரிவிக்கிறது.
2015-16ம் ஆண்டில் நாட்டின் முறைசாரா துறைகளில் பணியாற்றியோர் எண்ணிக்கை 11.13 கோடியாக இருந்த நிலையில், 2022-23ம் ஆண்டில் 10.96 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் இக்காலகட்டத்தில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2015-16ம் ஆண்டு முதல் முறைசாரா துறையின் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளைக் கண்காணித்து வருகிறது. இந்த தரவுகளைத் திரட்ட முக்கிய காரணமாக அமைந்தது 3 விஷயங்கள்.
2016ம் ஆண்டு நவம்பரில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு, 2017ம் ஆண்டு ஜூலையில் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி, 2020ம் ஆண்டு மார்ச்சில் தொடங்கிய கொரோனா தொற்று உள்ளிட்ட காரணிகளால் முறைசாரா துறைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இதன் காரணமாகவே வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளதைத் தான் இந்த புள்ளி விவரங்கள் நமக்குக் கூறுகிறது.
இந்த காலகட்டத்தில் முறைசாரா துறையில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 6.33 கோடியிலிருந்து 6.50 கோடியாக அதிகரித்துள்ளது, ஆனாலும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 16.45 லட்சம் குறைந்து 11.13 கோடி வேலைவாய்ப்புகளிலிருந்து 10.96 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
முறைசாரா துறையில் பணியாற்றும் 75 சதவீத பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மகாராஷ்டிரா, பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஆனால், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் மொத்த தொழிலாளர்களில் 42 சதவீதம் பேர் உள்ளனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) முறைசாரா துறைகளின் பங்கு 44 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மேலும், விவசாயம் அல்லாத துறைகளில் பணியாற்றும் 75 சதவீத தொழிலாளர்கள் இந்த துறைகளிலேயே பணிபுரிகின்றனர்.
மத்திய புள்ளி விவரத் துறை அமைச்சகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிட்டுள்ள முறைசாரா துறைகள் பற்றிய புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications