தீபாவளி, தனத்திரயோதசி பண்டிகையை முன்னிட்டுத் தங்கம் வாங்க விரும்புவோர், ஒரு நிமிடம் சிந்திப்பது நல்லது என்று செல்வ ஆலோசகர் அங்குர் ஜாவேரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அண்மை காலமாக தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வில் சுமார் 20 சதவீதம், தங்கத்தின் சர்வதேச விலை உயர்வால் ஏற்பட்டது அல்ல என்றும், அதற்குக் காரணம் வேறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்குர் ஜாவேரி தனது லிங்க்டுஇன் பதிவில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலையேற்றத்திற்கு சர்வதேச விலை உயர்வு அல்ல, மாறாக இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராகக் குறைந்துள்ளதே பிரதானக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது, அது டாலரில் பணம் செலுத்தப்பட்டு வாங்கப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாறாமல் நிலையாக இருந்தாலும் கூட, இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடையும் போது, இந்தியாவில் தங்கத்தின் விலை தானாகவே அதிகரித்து விடுகிறது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது, ஒருவர் 2020 ஆம் ஆண்டில் 500 டாலர் மதிப்புள்ள தங்கம் வாங்கியிருந்தால், அப்போது ஒரு டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு ரூ.73 ஆக இருந்தது. எனவே, அவர் மொத்தமாக செலுத்திய தொகை ரூ.36,500 ஆகும். ஆனால், இன்று டாலரின் மதிப்பு ரூ.88 ஆக உயர்ந்துள்ள நிலையில், அவர் முன்பு வாங்கிய அதே 500 டாலர் மதிப்புள்ள தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூ.44,000 ஆக இருக்கும்.
இந்த ரூ.7,500 உயர்வு என்பது தங்கம் விலை உயர்ந்ததால் கிடைத்தது அல்ல. மாறாக, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால் மட்டுமே கிடைத்தது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆனால், இந்தச் சாதகமான போக்கு விரைவில் தலைகீழாக மாறலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுப்பெறலாம் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது ரூ.88 ஆக இருக்கும் டாலர் மதிப்பு ரூ.84 ஆக குறைய வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலையாக இருந்தால் கூட, ரூபாய் மதிப்பு வலுப்பெறும் பட்சத்தில், இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான தங்கள் லாபத்தில் 4.5% வீழ்ச்சியைக் காண நேரிடலாம். ஒருவேளை சர்வதேச தங்கத்தின் விலையும் குறைந்தால், இந்த இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தங்கத்தின் இந்திய சந்தை செயல்பாடு இரண்டு காரணிகளைப் பொறுத்து அமைகிறது. ஒன்று, டாலரில் உள்ள தங்கத்தின் சர்வதேச விலை. மற்றொன்று டாலர் - ரூபாய் பரிமாற்ற விகிதம். தற்போது, இந்த இரண்டு காரணிகளும் இந்திய முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தங்கம் ஏற்கனவே அதன் வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. மேலும், ரூபாயின் மதிப்பு குறுகிய காலத்தில் வலுப்பெறவே அதிக வாய்ப்புள்ளது என்றும் அங்குர் ஜாவேரி தனது பதிவில் தெரிவித்துள்ளார். எனவே, தங்கத்தின் உண்மையான மதிப்பைப் புரிந்துகொண்டு, நிதானத்துடன் முதலீடு செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார்.
More From GoodReturns

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?



Click it and Unblock the Notifications