விக்சித் பாரத் 2047 இலக்கை நோக்கி இந்தியா நகரும் நிலையில், தங்க மற்றும் நிதிச் சேவைத் துறையினர் முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். வீடுகளில் முடங்கியுள்ள தங்கத்தைப் பொருளாதாரத்தில் பயன்படுத்துவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. இந்தியக் குடும்பங்கள் உலகிலேயே அதிக அளவில் தங்க இருப்புகளைக் கொண்டுள்ளன. ஆனால், இதன் பெரும்பகுதி வீடுகளிலும் பாதுகாப்புப் பெட்டகங்களிலும் பூட்டப்பட்டு, நாட்டின் உற்பத்தி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு மிகக் குறைவாகவே பங்களிக்கிறது.
விக்னஹர்தா கோல்ட் லிமிடெட் தலைவர் மகேந்திர லூனியா, வீடுகளில் முடங்கியுள்ள சேமிப்புகளை முறைசார்ந்த பொருளாதாரத்திற்குள் கொண்டுவர டிஜிட்டல் தங்கத்தை அரசு தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும் என்கிறார். அவர், "விக்சித் பாரத் 2047 இலக்கை தர்க்கரீதியான, பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அணுகினால், வீடுகளில் முடங்கியுள்ள பெருமளவு தங்கத்தை வெளிக்கொணர்ந்து, டிஜிட்டல் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பது அவசியம் என்பது தெளிவாகிறது" எனக் குறிப்பிடுகிறார்.

பட்ஜெட் 2026 மீதான எதிர்பார்ப்புகள் தனிப்பட்ட தொழில்துறை சார்ந்தவை மட்டுமல்ல. டிஜிட்டல் தங்கம் குறித்த விழிப்புணர்வையும், ஏற்பையும் அரசு ஊக்குவிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் பரந்த எதிர்பார்ப்பை இவை பிரதிபலிப்பதாக லூனியா தெரிவித்தார். லூனியாவின் கூற்றுப்படி, பிசிக்கல் தங்கத்தை டிஜிட்டல் வடிவமாக மாற்றுவது அரசு உற்பத்திக்கு பயன்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் உதவும். "இத்தகைய அளவில், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைவது மிகவும் எளிதாகும். விக்சித் பாரத் இலக்கை திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே அடையவும் முடியும்" என்றார் அவர்.
“ஒரு தோலா தங்கம் ஏறக்குறைய ரூ 1.5 லட்சம் வரை எட்டியுள்ள நிலையில், பாரம்பரிய நகைகள் வாங்குவது கணிசமாகக் குறைந்துள்ளது. நுகர்வோர் ஒரு கிராம் தங்கம் போன்ற சிறிய அளவில் வாங்கவோ, அல்லது முதலீடாக மட்டுமே தங்கத்தை வாங்கி வீட்டிலேயே சேமித்து வைக்கவோ ஆர்வம் காட்டுகின்றனர்” என்று லூனியா கூறுகிறார்.
"சுழற்சியில் இருக்க வேண்டிய மிகப்பெரிய பணப்புழக்கத்தை தனியார் பெட்டகங்களில் இந்த நிலை முடக்குகிறது" என்று லூனியா கூறினார். மக்களின் கலாச்சாரப் பிணைப்பை மாற்றாமல் பொருளாதாரச் சொத்து மதிப்பை வெளிக்கொணர டிஜிட்டல் தங்கம் ஒரு நடைமுறை மாற்று வழியை வழங்குகிறது என அவர் நம்புகிறார்.
தங்கப் பத்திரத் திட்டத்தை நிறுத்திய முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய லூனியா வலியுறுத்துகிறார். இத்திட்டம் அரசுக்கு நிதி இழப்பின்றி மூலதனத்தை அணுக உதவியதோடு, வீடுகளில் உள்ள தங்கச் சேமிப்பை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியது. “இத்திட்டத்தின் நீண்டகால பயன்களை அரசு ஆராய்ந்து, அதை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பட்ஜெட் 2026 நெருங்கும் வேளையில், டிஜிட்டல் தங்கம், தங்க பத்திர திட்டம் இரண்டும் முக்கிய கருப்பொருள்களாக உருவெடுத்துள்ளன. இலக்கு சார்ந்த கொள்கை ஆதரவு, வீடுகளில் உள்ள தங்கத்தைப் பிரதான பொருளாதாரத்தில் கொண்டு வந்து நிதி அமைப்பைப் பலப்படுத்தி, இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளை அடைய உதவும் என்று தொழில்துறை தலைவர்கள் நம்புகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!



Click it and Unblock the Notifications