இந்தியாவில் 24 பெரிய இறக்குமதி நிறுவனங்கள் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிலான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி அதாவது IGST வரி ஏய்ப்பு செய்துள்ளதை ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் டைரெக்டர் ஜெனரல் (டிஜிஜிஐ) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஆகியவை இணைந்து கண்டறிந்துள்ளன.
இதுவரை சுமார் 24 வழக்குகளில் 11,000 கோடி ரூபாய் அளவிலான ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏழு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் டைரெக்டர் ஜெனரல் அமைப்பின் மூத்த அதிகாரி எக்னாமிக்ஸ் டைம்ஸ்யிடம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வரி ஏய்ப்பு செய்த இறக்குமதியாளர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மீதமுள்ள 17 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியில் மத்திய வரி அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஐஜிஎஸ்டி-யில் வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள் பெரும்பாலும் ஸ்டீல், மருந்துகள், ரத்திணங்கள் மற்றும் நகைகள், ஜவுளித் துறைகளை சார்ந்தவையாக உள்ளது. ஜிஎஸ்டி வந்த பின்பு வரி ஏய்ப்பு, கருப்பு பணம் குறைக்கப்படும் என மத்திய அரசு நம்பினாலும், போலி ஈபில் வாயிலாகவும், குறைந்து மதிப்பிட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்களாலும் அதிகப்படியான வரி ஏய்ப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
இத்தகைய வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சகம், ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் டைரெக்டர் ஜெனரல் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகியவை பல முக்கியமான முயற்சிகளை செய்து வருகிறது.

இந்த வரி ஏய்ப்பு விஷயங்களை ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் டைரெக்டர் ஜெனரல் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகிய இரு அமைப்புகளும் மத்திய அரசு உருவாக்கிய Advanced Analytics in Indirect Taxation (ADVIT) மூலம் பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மறைமுக வரி துறை அதிகாரி கூறியுள்ளார்.
இதேவேளையில் போலி பில், போலி ஜிஎஸ்டி பதிவு மற்றும் தவறான இன்புட் டாக்ஸ் கிரெடிட் ஆகியவற்றைக் கண்டறிய மே 16 முதல் இரண்டு மாத தீவிர ஆய்வுகளை இந்தியா முழுவதும் மத்திய நிதியமைச்சகம் தலைமையில் வரி அமைப்புகள் நாடு முழுவதும் தொடங்க உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications