நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு ஆட்சியில், ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் (SMID) தாறுமாறான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 670க்கும் மேற்பட்ட பங்குகள் Multibagger லாபத்தை கொடுத்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 440 லட்சம் கோடி ரூபாய் வரையில் வேகமாக உயர மிக முக்கியமான காரணங்களில் ஒன்று ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளின் (SMID) அதிரடியான வளர்ச்சியும், ஐபிஓ-வும் தான்.

NDA கூட்டணி 3வது முறையாகத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தாலும், பிஜேபி 3.0 கடந்த 2 ஆட்சியைப் போல் இந்த முறை சீரானதாக இருக்காது என்றும், துறை சார்ந்த வளர்ச்சி மட்டுமே பிரதானமாக இருக்கும் என்றும், அதிகப்படியான ஏற்ற இறக்கங்களால் நிறைந்திருக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசின் கீழ் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் எவ்வாறு வர்த்தகம் செய்யப்படும் என்பது தான் தற்போது முதலீட்டாளர்களின் முக்கிய கவலையாக உள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகளில், பங்குச்சந்தையில் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டன என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், எந்தெந்த பங்குகள் எவ்வளவு லாபம் தந்துள்ளன என்பதை ஆராயும் ஓர் சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Ace ஈக்விடீஸ் நிறுவனத்தின் தகவல்களின்படி, மிட்கேப் பிரிவில் உள்ள 78 பங்குகள் மல்டிபேக்கர் லாபத்தை வழங்கியுள்ளன. இதில், கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்ச லாபத்தை அளித்த பங்கு என்றால் யுனோ மிண்டா (Uno Minda) ஆகும்.
மே 16, 2014 முதல் மே 31, 2024 வரையிலான காலகட்டத்தில், இந்த Uno Minda பங்கு கிட்டத்தட்ட 13,000% லாபம் ஈட்டித் தந்துள்ளது. மே 31, 2024 அன்று பங்குச்சந்தை மூடும் போது Uno Minda பங்கு விலை ரூ.877.50 ஆக இருந்தது.
இதை தொடர்ந்து டிரெண்ட் (4,566%), பதஞ்சலி ஃபுட்ஸ் (3,766.80%), சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா (3,695.92%), தீபக் நைட்ரைட் (3,458.84%), டாடா எல்க்ஸி (2,771.82%), டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (1,778.28%) ஆகிய பங்குகள் அதிகம் லாபம் கொடுத்த பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் பிரிவில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்ஜேவிஎன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL), NHPC, REC, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC), ஸ்டீல் அதார்ட்டி ஆஃப் இந்தியா (SAIL) ஆகியவை 517% முதல் 101% வரையிலான லாபத்தை வழங்கியுள்ளது.
இந்த காலகட்டத்தில் 11 மிட்கேப் பங்குகள் இரண்டு இலக்க லாபத்தை வழங்கியுள்ளன. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (BHEL), ஏசிசி, கனரா வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), என்எம்டிசி ஆகியவை 95% முதல் 2% வரையிலான லாபத்தை ஈட்டித் தந்துள்ளன.
இதேவேளையில் BHEL, கனரா வங்கி, IOB போன்ற பங்குகள் கடந்த ஒரு வருடத்திலேயே 100% க்கும் அதிகமான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளன.
இதேவேளையில் ஸ்மால்கேப் பங்குகள் பட்டியலில் 597 பங்குகள் அதிகப்படியாக 48,000% வரை உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக 10 ஆண்டு மோடி ஆட்சி காலத்தில் ஜோதி ரெசின்கள் & அட்ஹெசிவ்ஸ் (48,000%), டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ் (21,914.87%), ஓலெக்ட்ரா கிரீன்டெக் (21,675.56%), கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் (21,369.63%) மற்றும் டான்லா பிளாட்ஃபார்ம்ஸ் (18,674%) ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications