மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய சகோதரர் தான் அனில் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ஒரு நபராக இருந்தார் . இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் திகழ்ந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் அடைந்து அவர் திவால் நிலைக்கு சென்றார் .
அனில் அம்பானி: அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பெரும் சரிவில் இருந்து மீண்டு படிப்படியாக வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பி வருகின்றன. இந்த சூழலில் திடீரென அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அனில் அம்பானி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் அதன் அலுவலகங்கள் என 50க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடன் மோசடி: யெஸ் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் யெஸ் வங்கியில் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கி இருக்கிறது .
லஞ்சம் கொடுத்ததாக புகார்: இந்த கடன் தொகையை வாங்கிய நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் மற்ற ஷெல் நிறுவனங்களுக்கும் , நிறுவனத்தின் மற்ற அமைப்புகளுக்கும் மாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. செபி, பேங்க் ஆஃப் பரோடா என பல அமைப்புகள் மோசடி நிகழ்ந்ததை உறுதி செய்து புகார் அளித்துள்ளன. அதன் படி அமலாக்கத்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் யெஸ் வங்கியின் அதிகாரிகள் மற்றும் அதன் பிரமோட்டோர்களுக்கு அனில் அம்பானி லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறதாம்.
கடன் வழங்கியதில் மோசடி: மேலும் அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு யெஸ் வங்கியில் கடன் ஒப்புதல் வழங்குவதற்கான நடைமுறைகளில் பல்வேறு மோசடிகள் நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளன. மோசமான நிதி நிலைமையில் இருக்கக்கூடிய நிறுவனத்திற்கு எப்படி இவ்வளவு பெரிய கடன் தொகையை வழங்கினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனில் அம்பானி தரப்பில் இதற்காக யெஸ் வங்கி பிரமோட்டர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மோசடியாளரா அனில் அம்பானி?: அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் மட்டுமில்லாமல் 25 நபர்களும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்னர் தான் எஸ்பிஐ வங்கி அனில் அம்பானி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டார் என கூறி அவரை மோசடியாளர் என அறிவித்தது. இந்நிலையில் யெஸ் வங்கியில் கடன் வாங்க லஞ்சம் கொடுத்தது, கடனை முறைகேடாக பயன்படுத்தியது என்பன உள்ளிட்ட புகாரில் அனில் அம்பானி சிக்கி இருக்கிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications