இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமாக செயல்பட்டு வருகிறது . முகேஷ் அம்பானியின் சகோதரர் தான் அனில் அம்பானி.
அனில் அம்பானி ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர். ரிலையன்ஸ் குழுமத்துக்குட்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் செயல்படுத்தி வந்தவர். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு திவால் நிலைக்கு சென்றார். தற்போது தான் படிப்படியாக அவர் தொழிலில் மீண்டு வந்தார் . ஆனால் பல்வேறு கடன் மோசடி வழக்குகளில் தற்போது சிக்கி கொண்டுள்ளார்.

இந்நிலையில் 17,000 கோடி ரூபாய் பணம் மோசடி வழக்கில் அனில் அம்பானி இரண்டாவது முறையாக ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. நவம்பர் 14ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அனில் அம்பானி தன்னுடைய நிறுவனங்கள் பெயரில் வாங்கிய கடனை மற்ற நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தினார் என புகார் எழுந்துள்ளது . இது தொடர்பாக கடந்த ஜூலை மாதமே சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனை அடுத்து அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக கடன் பெற்று அதனை சட்ட விரோதமாக அவர் வேறு நிறுவனங்களில் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானி விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அவ்ரும் ஆஜரானார் அவரிடம் பல மணி நேரம் விசாரணையும் நடத்தப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களின் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இது தவிர அனில் அம்பானியின் வீடு மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள் அலுவலகங்களை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கியது. இவற்றின் மதிப்பு மொத்தம் 7500 கோடி ரூபாய் ஆகும்.
இந்த சூழலில் மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியிருக்கிறது. இதற்கிடையில் தான் அனில் அம்பானி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் அனில் அம்பானியை நிதி மோசடியாளர் என அறிவித்துள்ளன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications