தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களுக்கே உரிய சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாக மேம்படுத்தினால் சுற்றுலா துறை மேம்பட்டு அது சார்ந்த வாழ்வாதாரங்கள் வளர்ச்சி பெறும். தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு முடிவு செய்து இருக்கிறது.
சிப்காட்: தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சிப்காட் நிறுவனம் முதன்முறையாக சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட திட்டங்களையும் கையில் எடுக்க இருக்கிறது. சிப்காட்டை பொருத்தவரை வழக்கமாக தொழில் பூங்காக்களை கட்டமைப்பது மேலாண்மை செய்வது என தொழில் சார்ந்த உற்பத்தி துறை சார்ந்த பணிகளை தான் மேற்கொள்ளும். முதன்முறையாக இந்த நிறுவனம் சுற்றுலா துறையிலும் கால் பதிக்க இருக்கிறது.

சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்: விரைவில் சிப்காட் நிறுவனம் தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை கொண்டு வர இருக்கிறது. இதன்படி கள்ளக்குறிச்சி ,கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை சிப்காட் அமைப்பு கொண்டு வர இருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் தங்கும் விடுதிகள் ,சொகுசு விடுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்களை கட்டமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்: இதில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் சிப்காட் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிப்காட் நிறுவனம் இதற்கான நிலங்களை கையகப்படுத்தி இருக்கிறது, தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவற்றை கட்ட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தொழிற்பூங்காக்கள்: சிப்காட்டை பொருத்தவரை தமிழ்நாட்டில் நான்கு பிரிவுகளில் தொழிற் பூங்காக்களை வெற்றிகரமாக அமைத்து செயல்படுத்தி வருகிறது. சிறுசேரி ,ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ,இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, திருமுடிவாக்கம் ,கும்முடிபூண்டி ,நெப்பேடு ,சூளகிரி , பெருந்துறை, ஓசூர், ராணிப்பேட்டை, மணப்பாறை ,கடலூர் ,கங்கைகொண்டான் என பல்வேறு இடங்களிலும் தொழிற் பூங்காக்களை செயல்படுத்தி வருகிறது.

4 மாவட்டங்களில் திட்டம்: தற்போது சுற்றுலா துறையிலும் கால் பதிக்க இருக்கக்கூடிய சிப்காட் நிறுவனம் அந்தந்த மாவட்ட சுற்றுலா துறையோடு இணைந்து எந்த பகுதிகளில் இந்த பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவற்றை அமைத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது .கன்னியாகுமரி மாவட்டத்தில் வடக்கு தாமரைக் குளம் .ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி .கள்ளக்குறிச்சியில் கரியாலூர். தூத்துக்குடியில் மேல விட்டான் ஆகிய நான்கு பகுதிகளிலும் சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட கட்டமைப்புகள் வரை இருக்கின்றன .
பொழுதுபோக்கு பூங்காக்கள்: இங்கே நிலம் உள்ளிட்டவை கட்டுமான பணிகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கும் சிப்காட் நிறுவனம் இந்தப் பகுதியில் உணவகங்கள் , தங்கும் விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை அமைக்க விரும்புவோர் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications