இந்திய மிடில் கிளாஸ் மக்களின் நுகர்வை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு ஜிஎஸ்டி வரிமுறையில் பெரிய அளவிலான சீர்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் நாம் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை குறைகிறது.
செப்.22 முதல் அமல்: சிறிய ரக வாகனங்களின் விலை குறைகிறது, மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அதற்காக நாம் செலுத்தும் கட்டணமும் குறைகிறது. இது தவிர டிவி, ரெஃப்ரிஜிரேட்டர் போன்ற சாதனங்களுக்கான வரி விகிதமும் குறைக்கப்பட்டு இருப்பதால் அவற்றின் விலையும் இந்தியாவில் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பிறகு பெருமளவில் குறைய இருக்கிறது.

மிடில் கிளாஸ் மக்களுக்கு லாபம்: பண்டிகை காலத்தை ஒட்டி இந்தியாவில் மக்களுடைய நுகர்வு போக்கு அதிகமாக இருக்கும் இது தவிர போனஸ் வரவு , சேமிப்பை எடுப்பது என மக்களிடையே பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால் சரியான நேரத்தில் திட்டமிட்டு அரசு ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் மிடில் கிளாஸ் மக்களுக்கு கணிசமான லாபத்தை தருவதாக அமைந்திருக்கிறது.
எவ்வளவு சேமிப்பு: ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடும்பம் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது என வைத்துக்கொள்வோம் இந்த குடும்பம் உணவு, கல்வி, காப்பீடு போன்றவற்றுக்காக ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாயை செலவிடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். இவர்கள் இனி இந்த 6 லட்சம் ரூபாயில் 45,000 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்கிறார் கிளியர் டேக்ஸின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய ஆர்சித் குப்தா.
பெரிய தொகை சேமிப்பு: இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது இந்த 6 லட்சம் ரூபாயில் ஆண்டுக்கு 45 ரூபாய் வரை சேமிப்பைத் தரும் என கூறும் அவர் அண்மையில் மத்திய அரசு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு எந்தவித வருமான வரியும் இல்லை என்ற வகையில் புதிய வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் பெரிய மாற்றத்தை அறிவித்தது. எனவே இந்த இரண்டையும் நாம் ஒருங்கிணைத்து பார்க்கும்போது ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டக் கூடிய ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடும்பம் ஜிஎஸ்டி வரி திருத்தம் மற்றும் வருமான வரி விலக்கு ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தமாக 1.25 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கிறார்.
முதலீடாக மாறும்:இந்த 1.25 லட்சம் ரூபாய் என்பது அரசுக்கு செல்லாமல் நேரடியாக மக்களின் கைகளிலேயே புழங்க போகிறது என கூறும் குப்தா, மக்கள் நிச்சயமாக இந்த தொகையை கைகளில் வைத்திருக்க மாட்டார்கள் இதனை கொண்டு ஏதேனும் பொருட்களை வாங்குவார்கள் சிலர் முதலீடு கூட மேற்கொள்வார்கள், எனவே இந்த பணம் மக்களுக்கு சேமிப்பாகவோ அல்லது பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வருமானமாகவும் மாறப்போகிறது என கூறுகிறார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications