மும்பை தனியார் வங்கியில் சுமார் 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடம் இருந்து வெறும் 3 நாளில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. வெறும் ஒரு லிங்க் அனுப்பி இந்த மாபெரும் மோசடி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் உலகில் அனைத்து விதமான நிதி சேவைகளும் இணையம் வாயிலாகவே கிடைப்பதால் பல சௌகரியம் இருந்தாலும், இதில் பல ஆபத்துகளும் உள்ளது என்பது மறுக்க முடியாது. இணைய சேவைகளை நாளுக்கு நாள் மேம்படுவது போல திருடர்களும், மோசடியாளர்களும் மக்களிடம் டிசைன் டிசைனாக கொள்ளையடிக்கும் வழியை கண்டுப்பிடித்து வருகின்றனர்.
வங்கிகள், மத்திய அரசு, ஆர்பிஐ என பல அமைப்புகள் இணைய மோசடிகள் குறித்து விழிப்புணர்வு அளித்தாலும் இந்திய மக்களுக்கு இது சரியாக சென்றடையவில்லை என்றால் மிகையில்லை. இதற்கு முக்கியமான உதாரணம் தற்போது மும்பை தனியார் வங்கி கிளையில் நடந்திருக்கும் மோசடி.
தனியார் வங்கி
மும்பையில் ஒரு தனியார் வங்கியை சேர்ந்த 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசடி கும்பல் KYC, PAN விபரங்கள் அப்டேட் குறித்து ஒரு லிங்க் உடன் மெசேஜ் அனுப்பியுள்ளது. இந்த லிங்க்-ஐ கிளிக் செய்த அனைத்து வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்தும் பணம் களவாடப்பட்டு உள்ளது.
KYC, PAN விபரங்கள்
வங்கியில் KYC, PAN விபரங்களை அப்டேட் செய்வது மிகவும் முக்கியம் என்பதால், இந்த மோசடி கும்பல் வலையில் 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் விழுந்துள்ளனர். இந்த நிலையில் மும்பை போலீஸ் அதிகாரிகள் மக்களுக்கு வங்கி தரவுகள் குறித்து வரும் மெசேஜ்-ல் இருக்கும் லிங்க்-களை கிளிக் செய்ய கூடாது என அலோசனை விடுத்துள்ளது.
வங்கி கணக்கு முடக்கம்
இந்த மோசடி கும்பல் KYC, PAN விபரங்கள் அப்டேட் செய்யாத காரணத்தால் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது என போலியாக வங்கிகள் அனுப்புவது போலவே மெசேஜ் அனுப்பியது. முடக்கப்பட்ட வங்கி கணக்கை திரும்ப பெற மெசேஜ்-ல் உள்ள இணைப்பை கிளிக் செய்து அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
போலியான இணையத்தளம்
இணைப்பை கிளிக் செய்த உடன் வங்கியை போலவே ஒரு போலியான இணையத்தளத்திற்கு கொண்டு செல்கிறது. இதில் இண்டர்நெட் பேங்கிங்-ன் கஸ்டமர் ஐடி, பாஸ்வோர்டு, இதர முக்கியமான தரவுகளை கேட்டு உள்ளது. இது மோசடி என தெரியாமல் தகவல் பதிவு செய்த மக்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளது.
டிவி நடிகை ஸ்வேதா மேனன்
இப்போது பாதிக்கப்பட்ட 40 வாடிக்கையாளர்களில் டிவி நடிகை ஸ்வேதா மேனன்-ம் ஒருவர், இவர் அளித்த புகாரில் இந்த போலி மெசேஜ்-ல் குறிப்பிட்ட லிங்க்-ஐ கிளிக் செய்து தகவல்களை பதிவு செய்த உடனே, வங்கி தரப்பில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இந்த அழைப்பில் பேசியவர் OTP-ஐ பதிவிட சொன்னதால் பதிவிட்ட அடுத்த சில நிமிடத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 57,636 ரூபாய் டெபிட் செய்யப்பட்டதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications