பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற போது, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என உறுதி அளித்தார் பிரதமர் மோடி. இன்று வரையில் இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மத்திய.
இந்த நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளது. அந்த வகையில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் என்னென்ன இருக்கிறது தெரியுமா..?

பிரதமர்-கிசான் உதவி திட்டம்: பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய திட்டம் தான் பிஎம் கிசான் யோஜனா என்ற நிதி உதவித்தொகை திட்டம். இந்த மூலம் ஓராண்டில் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இது நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே அனுப்பப்படுகிறது.
பயிர்க்காப்பீடு திட்டம்: புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிர் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் ஏற்படும் மகசூல் இழப்பு ஆகியவற்றில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு விவசாயிகள் பயிர்க்காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு காலத்தில் ஏற்படும் மகசூல் இழப்புகள் மற்றும் பாதிப்புகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும்.
பிரதமர் கிரிஷி சின்சாய் திட்டம்: நீர்ப்பாசனங்களை ஒழுங்குப்படுத்தி அதன் மூலம் மகசூலை அதிகரிக்க உதவும் திட்டம் இது. வறட்சியால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நீர்ப்பாசன ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் பிரதமர் கிரிஷி சின்சாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் உள்கட்டமைப்பு நிதி: விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை மதிப்புக்கூட்டி, லாபகரமான விலைக்கு விற்பனை செய்யும் வகையில் அரசு, தனியார் நிறுவனம் மூலம் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு என தொடங்கப்பட்டது இந்த நிதி. இந்த திட்டத்தின் மூலம் வட்டி மானியத்துடன் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
கிசான் கடன் அட்டை: கிசான் கடன் அட்டை திட்டம் விவசாயிகள், விவசாயம் மற்றும் அதை சார்ந்த தேவைகள் மற்றும் பண்ணை சாரா நடவடிக்கைகளுக்கு வங்கிகளில் இருந்து தேவை அடிப்படையில் கடன் பெற உதவுகிறது. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உழுதல், சாகுபடி மற்றும் சந்தை செலவுகள் என அனைத்திற்கும் எளிதாக இதன் மூலம் கடன் பெறலாம்.
தேசிய நிலையான வேளாண்மை திட்டம்: புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றங்களால் விவசாயம் பெரும் பாதிப்பை சந்திக்கிறது. எனவே நீடித்த நிலையான வேளாண் நடைமுறைகளை கொண்டு வந்து ஒருங்கிணைந்த விவசாயம், முறையான நீர் மேலாண்மை, மண் வளம் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்ட திட்டம் இது. எதிர்காலத்தில் விவசாயத்தையும் உணவு உற்பத்தியையும் பாதுகாக்கும் ஒரு திட்டம் ஆகும்.
இது தவிர ட்ரோன்கள் மூலம் பயிர்களை கண்காணிப்பது , மருந்துகளை தெளிப்பது போன்ற நடைமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. கால்நடை பராமரிப்புக்கு உதவும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் உள்ளிட்ட திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications