நாட்டில் வரவிருக்கும் யூனியன் பட்ஜெட் 2025 ஆனது சாமானியர்கள் முதல் விவசாயிகள் வரை அதிக எதிர்பார்ப்புகளை கொடுத்துள்ளது. அதன்படி மத்திய அரசின் பட்ஜெட்டில் என்ன மாதிரியான தாக்கம் இருக்கும் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. புதிய அறிவிப்புக்கள் என்ன? என்ன மாதிரியான விலைவாசிகள் இருக்கும் உள்ளிட்டவைகளுக்கு விடை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கிடைக்கும். அந்த வகையில், விவசாயிகளுக்கு அதிக நன்மையை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2025-26 பட்ஜெட்டில் கிசான் கிரெடிட் கார்டின் (கேசிசி) கடன் வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது இது ரூ.3 லட்சமாக உள்ளது. எனவே பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிசான் திட்டமானது அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக உள்ளது. கிசான் கிரெடிட் கார்டு திட்டம் முதலில் 1998 இல் தொடங்கப்பட்டது.
பயிர் உற்பத்தி மற்றும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மலிவு விலையில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்போது கிசான் கிரெடிட் கார்டு கடன்களுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அரசு 2 சதவீத வட்டி மானியத்தை அனுமதிக்கிறது. இந்தத் திட்டமானது, கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு கூடுதலாக 3 சதவீத தள்ளுபடியையும் வழங்குகிறது. உண்மையில், விவசாயிகள் 4 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறுகிறார்கள்.

இதற்கிடையில், கிசான் கிரெடிட் கார்டு கடன் வரம்பை பல ஆண்டுகளாக உயர்த்தியதால் விவசாய செலவுகள் அதிகரித்து வருவதை விவசாய நிபுணர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். இந்த வரம்பை உயர்த்தினால் விவசாயத் துறையில் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் முடியும்.
எனவே, கிசான் கிரெடிட் கார்டு கடன் வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் அதிகரித்து வரும் சூழலில், இம்முறை இந்த கோரிக்கை அனுதாபத்துடன் பரிசீலிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நாட்டில் விவசாயம் அழிந்து வருவதாக வெளியாகும் செய்திகளையும் அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விவசாயச் செலவினங்களில் கூர்மையான அதிகரிப்பு கடன் வரம்புகளை அதிகரிக்கத் தூண்டியது.
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், விவசாயத் துறையை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கடன் வரம்பை உயர்த்துவது இத்துறைக்கு ஊக்கமளிக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது விவசாயிகளுக்கு சிறந்த கருவிகள், மேம்படுத்தப்பட்ட விதைகள் மற்றும் விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முடிவு எடுக்கப்பட்டால் பெரிய விவசாயிகள் மட்டுமின்றி சிறு, குறு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீன் வளர்ப்போர் என பலருக்கும் பலன் கிடைக்கும்.
ஜூன் 30, 2023 நிலவரப்படி, கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் 7.4 கோடிக்கும் அதிகமான கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் ரூ.8.9 லட்சம் கோடி நிலுவைத் தொகையும் அடங்கும். அக்டோபர் 2024க்குள், கூட்டுறவு-பிராந்திய கிராமப்புற வங்கிகள் 167.53 லட்சம் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளன. இதன் மொத்த கடன் வரம்பு ரூ.73 லட்சம் கோடி. இதில் பால் பண்ணையாளர்களுக்கு ரூ.10,453.71 கோடியும், மீன் விவசாயிகளுக்கு ரூ.341.70 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications