ஐடிசி நிறுவனம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் மிக முக்கியமான முதலீடாக விளங்கும் வேளையில், ஐடிசி பங்குகளில் முதலீடு செய்த ஒருவர், தான் வாங்கிய பங்குகளை மறந்துப்போன நிலையில், இப்போது தெரிய வந்தது மூலம் இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.
ராஞ்சியில் உள்ள ஹதியா பகுதியில் வசிக்கும் உஷா சர்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஐடிசி பங்குகள் தொடர்புடைய நிதி நாடகத்தில் தன்னை அறியாமலேயே ஒரு கதாநாயகியாக மாறிப் போனார்.

1970 களில், உஷாவின் தந்தை, இப்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் FMCG நிறுவனங்களில் ஒன்றான ஐடிசி நிறுவனத்தில் முதலீடு செய்து 420 பங்குகளை வாங்கினார். அதன்பின்னர் அதைப் பற்றி மறந்தே போனார்.
பல ஆண்டுகளாக, போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு போன்ற கார்ப்பரேட் நடவடிக்கைகள் அந்த பங்குகளை 2017 இல் 6.5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 1,73,880 ஐடிசி பங்குகளாக மாற்றியது. உஷா, தனது தந்தை மற்றும் அவரது சகோதரரின் மறைவுக்குப் பிறகு, இந்த அதிர்ஷ்டத்தின் ஒரே வாரிசு ஆனார்.
இருப்பினும், இந்த செல்வத்தை உரிமை கொண்டாடுவது உஷாவுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. பங்குகள் மிகவும் மதிப்புமிக்கதாக இருந்ததால், பங்குகளை உஷா ஷர்மாவின் பெயருக்கு மாற்றினால், நீதிமன்றத்தில் இருந்து வாரிசுச் சான்றிதழைப் பெற வேண்டும்.
ராஞ்சியில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஹரித்வாரில் உள்ள நீதிமன்றத்தில் வாரிசு சான்பிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இறுதியில் உஷா சான்றிதழைப் பெற்றார். இப்போது, ஐடிசியின் பங்குகளைப் பெறுவது மட்டுமே எஞ்சியுள்ளது. இது மற்றொரு பெரிய தடையாக இருந்தது.
உஷாவின் வாரிசுரிமையைப் பெற பலமுறை முயன்றும் நிராகரிக்கப்பட்டது, நிறைய ஆவணங்கள் தேவைப்பட்டன.
அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும், பங்கு பரிமாற்றத்துக்குத் தேவையான ஆவணங்களை ஐடிசி பெறுவதற்கும் அவர் நிறைய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், உஷா அதிக நிராகரிப்புகளை மட்டுமே சந்தித்தார்.
அப்போதுதான் அவரது மகன் சஞ்சய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வெளி உதவியை நாட முடிவு செய்தார். முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி நிறுவனமான ஷேர் சமாதானன் என்ற ஒரு நிதித் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடினார். இந்த நிறுவனம் உஷாவுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுத் தந்தது.
உஷா ஷர்மாவின் சார்பாக ஐடிசிக்கு ஷேர் சமாதான் அழைப்புகள் மற்றும் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை எழுதியது. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெற்றி!
ஐடிசி இறுதியாக மறைந்த மனன் லால் ஷர்மாவின் மொத்தம் 1,73,880 ஈக்விட்டி பங்குகளை உஷா ஷர்மாவின் பெயரில் மாற்றியது. இது பண அடிப்படையில் மட்டுமல்ல, புதிய வாழ்க்கையின் அர்த்தத்திலும் இனிமையான ஒரு வெற்றியாகும்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications