GST வரி குறைந்தாலும் விலையை அதிகரிக்க முடியலையே.. அச்சத்தில் விழி பிதுங்கும் நிறுவனங்கள்..!!

உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சோப்பு, பிஸ்கட், சலவை சோப்பு, வாகனங்கள் மற்றும் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

மூலப்பொருட்களின் விலை, இறக்குமதி செலவு என உற்பத்தி செலவுகள் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், நிறுவனங்களின் லாப வரம்பு (Profit Margin) குறைகிறது. இந்த செலவுகளை சமாளிக்க அவர்கள் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

GST வரி குறைந்தாலும் விலையை அதிகரிக்க முடியலையே.. அச்சத்தில் விழி பிதுங்கும் நிறுவனங்கள்..!!

சமீபத்தில், மத்திய அரசு சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரியை குறைத்தது. இதன் நோக்கம், பொதுமக்களின் வாங்கும் திறனை அதிகரித்து, சந்தையில் நுகர்வை மேம்படுத்துவதுதான். இந்த நேரத்தில், நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையை உயர்த்தினால், "ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பலனை நிறுவனங்கள் மக்களுக்கு தரவில்லை" என்று மத்திய அரசு கருதலாம் அல்லது அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என பெரும்பாலான நிறுவனங்களின் நிர்வாகிகள் அஞ்சுகின்றனர். இந்த அச்சத்தின் காரணமாகவே, செலவு அதிகரித்த போதும் விலை உயர்வை தள்ளிப் போட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

வாகனத் துறை : கார் தயாரிப்பாளர்கள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் விலையை உயர்த்துவார்கள். ஆனால், இந்த முறை, ரூபாயின் மதிப்பு குறைந்ததால் இறக்குமதி உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளது. இருந்தும், விலை உயர்வு குறித்த அரசின் தெளிவான வழிகாட்டுதல் கிடைக்கும் வரை விலையை மாற்றாமல் இருக்கலாமா என்று மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார் போன்ற முன்னணி நிறுவனங்கள் யோசித்து வருகின்றன.

எலெக்ட்ரானிக்ஸ் துறை : டிவி மற்றும் ஏசி தயாரிப்பில் உள்ள எல்ஜி போன்ற நிறுவனங்கள், சர்வதேச அளவில் மெமரி சிப் விலை 60% வரை உயர்ந்திருந்தாலும், மேலும் புதிய ஏசி ஆற்றல் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் 6% முதல் 9% வரை விலையை உயர்த்த வேண்டியிருந்தாலும், விலையை உயர்த்தாமல் பிடிவாதமாக வைத்துள்ளன.

பிஸ்கட் தயாரிப்பாளர்கள் : பெரும்பாலான நிறுவனங்கள், அரசு நுகர்வை கூட்ட கவனம் செலுத்துவதால், மார்ச் 2026 வரை விலையை உயர்த்தாமல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக விப்ரோ கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வினீத் அகர்வால் கூறுகையில், "ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு விற்பனை அளவு அதிகரித்துள்ளதால், இப்போதைக்குச் செலவு அதிகரித்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம். ஜனவரி இறுதி வரை விலையை உயர்த்த நாங்கள் திட்டமிடவில்லை. வாடிக்கையாளர்களின் தேவையை அதிகரிப்பதற்காக லாபத்தில் சிறிது குறைவை ஏற்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி மாற்றம் இல்லாத சோப்பு, அழகு சாதனப் பொருட்கள் போன்ற துறைகளிலும் கூட, நிறுவனங்கள் விலையை உயர்த்த வாய்ப்பிருந்தும், சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு மிகவும் கவனமாகவே செயல்படுகின்றன. இதன் மூலம், நிறுவனங்கள் லாபத்தைவிட, அரசின் கோபத்தையும், சந்தை நுகர்வையும் தக்கவைத்துக் கொள்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது தெள்ள தெளிவாகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+