நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது, சமீபகாலமாக பெரிய நிறுவனங்களில் பெரிய சம்பளத்தில் வேலை பார்த்த பல இளைஞர்கள் விவசாயத்தை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். விவசாயத்திலும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் நிரூபித்து வருகின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர்தான் அபினவ் சிங்.
இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அதிகப்படியான சம்பளத்தில் பணியாற்றி வந்த நிலையில, இந்த வேலையை துறந்து விட்டு இன்று சொந்த ஊரில் விவசாயம் செய்து மாதம் சராசரியாக ரூ.1,50,000 சம்பாதிக்கிறார்.

உத்தர பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள சில்பிலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அபினவ் சிங். விவசாய குடும்ப பின்னணியில் வளர்ந்த அபினவ் சிங் படிப்பை முடித்தவுடன் பிரிட்டன் நாட்டில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூ.80 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
பணம் அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட நிறைவான வாழ்க்கையை விரும்பினார். இது அங்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் 2014ல் பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அவர் திரும்பினார்.
இந்தியாவில் குர்கானில் உள்ள மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் சேர்ந்தார். ஆனாலும் இதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சொந்த ஊரில் விவசாயம் செய்வதோடு, அங்குள்ள மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் விவசாயம் தான் நமக்கானது என்று முடிவு செய்த அபினவ் சிங், 2016ல் மைக்ரோசாப்ட் வேலையை ராஜினாமா செய்தார். தனது 31 வயதில் கெர்பரா (Gerbera) விவசாயத்தில் அனுபவம் பெற முடிவு செய்தார். கெர்பரா என்பது பூக்கள் கொண்ட தாவரம், உத்தர பிரதேசத்தில் திருமண காலங்களில் இந்த பூக்களுக்கு பெரிய தேவை இருக்கும்.
கெர்பரா சாகுபடி குறித்து தெரிந்து கொண்ட பின், அபினவ் சிங் தனது கிராமத்தில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு பாலிஹவுஸ் அமைத்தார். வங்கி கடன் ரூ.48 லட்சம் மற்றும் தனது சேமிப்பு தொகைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.58.16 லட்சத்தை முதலீடாக போட்டு இந்த பாலிஹவுஸை அமைத்தார்.
2012 பிப்ரவரியில் முதல் முறையாக அறுவடை செய்தார். பூ சாகுபடி விவசாயத்தை தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் அபினவ் சிங்குக்கு ரூ.18,00,000 வருமானம் கிடைத்தது. மேலும், விவசாயம், பேக்கேஜிங், போக்குவரத்து மற்றும் விற்பனை போன்ற பல்வேறு பிரிவுகளில் சுமார் 100 பேருக்கு வேலைவாய்ப்பும் வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.
அபினவ் சிங் கூறுகையில், நான் முன்பு பார்த்த வேலையில் எவ்வளவு சம்பாதித்தேனோ அதனை காட்டிலும் குறைவாகவே தற்போது சம்பாதிக்கிறேன். ஆனால் மற்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவது, எனது சொந்த ஊரில் தனித்துவமான ஒன்றை செய்வது மற்றும் எனது குடும்பத்துடன் தங்குவது போன்ற மகிழ்ச்சியை எவ்வளவு பணத்தாலும், ஆடம்பரமான வாழ்க்கையாலும் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications