ரூ.35 கோடி நஷ்ட ஈடு கேட்டு மைக்ரோசாப்ட் மீது வழக்கு.. இந்தியாவை சேர்ந்த முன்னாள் ஊழியர் அதிரடி..

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான லத்திகா பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனக்கு 35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் எக்ஸிக்யூடிவ் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தவர் தான் லத்திகா பை.

இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். தற்போது அந்த வழக்கானது பெங்களூரு சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மன ரீதியாக தன்னை துன்புறுத்தி ராஜினாமா செய்யும் சூழலுக்கு தள்ளியதாக குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு எதிரான பணி சூழலை உருவாக்கி, தன் புகழுக்கு களங்கம் விளைவித்து வேலையை ராஜினாமா செய்ய வைத்தனர், எனவே மைக்ரோசாப்ட் எனக்கு 35 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

ரூ.35 கோடி நஷ்ட ஈடு கேட்டு மைக்ரோசாப்ட் மீது வழக்கு.. இந்தியாவை சேர்ந்த முன்னாள் ஊழியர் அதிரடி..

லத்திகா பை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான வென்ச்சர் கேபிடல் பிரிவுக்கான தலைவராக செயல்பட்டு வந்தார். 2019 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவின் 100 யூனிகார்ன் நிறுவனங்கள் என்ற திட்டத்தை தொடங்கியது. இதற்கு லத்திகா பை தான் தலைமை வகித்தார். தொடக்க நிலையில் இருக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டம் தான் இது.

மத்திய மாநில அரசுகளோடு இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு லத்திகா பை நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விசாரணை நடத்தியது. 2019ஆம் ஆண்டிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டு லத்திகா பை மீது எந்த ஒரு தவறும் இல்லை என கண்டறிந்தது. இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டில் அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் இரண்டாவது முறையாக லத்திகாப் பையின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டது. பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இது போன்ற விசாரணைகள் நடத்தப்படும் போது அவை பதிவு செய்யப்பட வேண்டும் ஆனால் லத்திகா பையிடம் நடத்தப்பட்ட விசாரணை பதிவு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்த விசாரணையில் நிறுவனத்தின் விதிமுறைகள் எதுவுமே கடைபிடிக்கப்படவில்லை என லத்திகா பை கூறுகிறார்.

தொடர்ந்து நிறுவனம் பல்வேறு பொறுப்புகளில் இருந்து இவரை படிப்படியாக விலக்கி இருக்கிறது இவர் பிரச்சனையை உண்டாக்குபவர் என இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது . விசாரணைகளின் போது இவர் தன்னுடைய மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அதிகாரிகள் தன் மீதான விசாரணையை முறையாக நடத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட 6 மாத காலம் பல முறைகளில் தான் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கும் அவர் தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவித்து, மன ரீதியாக தன்னை துன்புறுத்தி வேலையை ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறியுள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதி, இதனால் ஏற்பட்ட வருமான இழப்பு, மன உளைச்சல் ஆகியவற்றுக்கு ஈடாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 35 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

FAQs
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது இவர் ஏன் வழக்கு தொடர்ந்துள்ளார்?

நிறுவனம் தன்னை மன ரீதியாக துன்புறுத்தி, தனக்கு எதிரான பணிச்சூழலை உருவாக்கி தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததால் அதற்கு நஷ்ட ஈடு வேண்டும் என கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

லத்திகா பை எவ்வளவு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்?

லத்திகா பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனக்கு 35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

யார் இந்த லத்திகா பை? இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் எந்த பதவி வகித்து வந்தார்?

லத்திகா பை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவில் பணியாற்றி வந்தவர். மைக்ரோசாப்ட் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்ட பிரிவின் தலைவராக இருந்தவர்.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+