மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான லத்திகா பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனக்கு 35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் எக்ஸிக்யூடிவ் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தவர் தான் லத்திகா பை.
இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். தற்போது அந்த வழக்கானது பெங்களூரு சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மன ரீதியாக தன்னை துன்புறுத்தி ராஜினாமா செய்யும் சூழலுக்கு தள்ளியதாக குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு எதிரான பணி சூழலை உருவாக்கி, தன் புகழுக்கு களங்கம் விளைவித்து வேலையை ராஜினாமா செய்ய வைத்தனர், எனவே மைக்ரோசாப்ட் எனக்கு 35 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

லத்திகா பை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான வென்ச்சர் கேபிடல் பிரிவுக்கான தலைவராக செயல்பட்டு வந்தார். 2019 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவின் 100 யூனிகார்ன் நிறுவனங்கள் என்ற திட்டத்தை தொடங்கியது. இதற்கு லத்திகா பை தான் தலைமை வகித்தார். தொடக்க நிலையில் இருக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டம் தான் இது.
மத்திய மாநில அரசுகளோடு இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு லத்திகா பை நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விசாரணை நடத்தியது. 2019ஆம் ஆண்டிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டு லத்திகா பை மீது எந்த ஒரு தவறும் இல்லை என கண்டறிந்தது. இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டில் அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் இரண்டாவது முறையாக லத்திகாப் பையின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டது. பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இது போன்ற விசாரணைகள் நடத்தப்படும் போது அவை பதிவு செய்யப்பட வேண்டும் ஆனால் லத்திகா பையிடம் நடத்தப்பட்ட விசாரணை பதிவு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்த விசாரணையில் நிறுவனத்தின் விதிமுறைகள் எதுவுமே கடைபிடிக்கப்படவில்லை என லத்திகா பை கூறுகிறார்.
தொடர்ந்து நிறுவனம் பல்வேறு பொறுப்புகளில் இருந்து இவரை படிப்படியாக விலக்கி இருக்கிறது இவர் பிரச்சனையை உண்டாக்குபவர் என இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது . விசாரணைகளின் போது இவர் தன்னுடைய மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அதிகாரிகள் தன் மீதான விசாரணையை முறையாக நடத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட 6 மாத காலம் பல முறைகளில் தான் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கும் அவர் தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவித்து, மன ரீதியாக தன்னை துன்புறுத்தி வேலையை ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறியுள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதி, இதனால் ஏற்பட்ட வருமான இழப்பு, மன உளைச்சல் ஆகியவற்றுக்கு ஈடாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 35 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications