ரூ. 94,000 கோடி முதலீடுகளை திரும்ப பெற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. இதற்கு சீனா தான் காரணமா?

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் இருந்து கடந்த மாதத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் பெரிய அளவிலான தொகையை திரும்ப பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து 94,000 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளன. அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டது.

குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்கள் வசம் இருந்த பெருமளவிலான பங்குகளை விற்று விட்டன. அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் 94,017 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ரூ. 94,000 கோடி முதலீடுகளை திரும்ப பெற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. இதற்கு சீனா தான் காரணமா?

இது முன் எப்போதும் இல்லாததை விட அதிகம் என்கின்றனர் சந்தை ஆய்வாளர்கள். நடப்பு ஆண்டிலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை விற்பனை செய்த மாதமாக அக்டோபர் இருக்கிறது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து எடுத்த தொகையை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீன பங்குச் சந்தையில் சீன நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 61,973 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து திரும்ப பெற்றிருந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் நடப்பாண்டிலேயே அதிகபட்சமாக வெளிநாட்டு நிறுவனங்கள் 57,724 கோடி ரூபாய்க்கு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தன. தற்போது சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றி அமைப்பது ,சீன பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவது, அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் ஈரான் இஸ்ரேல் இடையிலான சண்டை ஆகியவை காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் முதலீட்டு போக்கை மாற்றி வருகின்றன.

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகளை பொறுத்து இந்தியாவில் மேற்கொண்டு வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்குமா அல்லது திரும்ப பெறப்படுமா என்பது குறித்து தெரியவரும் என முதலீட்டு சந்தை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்ததால் பெஞ்ச்மார்க் குறியீடுகள் தங்களுடைய உச்சத்தில் இருந்து 8% வரை சரிவை கண்டுள்ளன.

இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் அதிக மதிப்பீட்டை கொண்டிருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் விற்றுவிட்டு சீனாவில் வாங்கு என்ற கொள்கையை பின்பற்றுகின்றன. அண்மையில் தான் சீன அரசு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இது ஒரு பாசிட்டிவான மூவாக பார்க்கப்படுகிறது. எனவே இந்திய சந்தையை விட சீன சந்தை வளர்ச்சியில் இருக்கும் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவிலான பங்குகளை விற்பனை செய்தாலும் உள்நாட்டை சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிற நிறுவனங்கள் அதற்கு ஈடாக பங்குகளில் முதலீடு செய்துள்ளன என்றும் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+