ரேஷன் அட்டைதாரர்களே ஜூலை 31 தான் கடைசி நாள்.. இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..!!

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்பட கூடிய ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் மானிய விலையில் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அடுத்த மாதம் முதல் இவை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற ரேஷன் அட்டைதாரர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் கேஒய்சி முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன்படி இதுவரை ரேஷன் கடைகளில் கை விரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் அட்டைதாரர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு சென்று கைவிரல் ரேகை பதிவு செய்து அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களே ஜூலை 31 தான் கடைசி நாள்.. இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..!!

திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் அதிகாரப்பூர்வமாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கும் நோக்கத்திலும் கை விரல் ரேகை பதிவு மூலம் கேஒய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Also Read

கைவிரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே அத்தியவாசிய பொருள்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே ரேஷன் அட்டையில் இடம் பெற்றவா்கள் அனைவருமே ரேஷன் கடைகளீல் விரல் ரேகை பதிவு செய்தால் தான் உணவு பொருள்கள் விநியோகம் செய்யப்படுமாம். உங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினா்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் கை விரல் ரேகை பதிவு செய்வைதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதனை செய்ய தவறினால் அடுத்த மாதம் முதல் ரேஷனில் இலவச அரிசி உள்ளிட்டவை கிடைக்காமல் போகலாம். இதுவரை நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்கள் உடனே தங்கள் கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் . இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியமாகும்.

முதலில் உங்களின் ரேஷன் கடைக்கு சென்று கேஒய்சி நிலுவையில் இருக்கிறதா என்பதை கேட்டு கொள்ளுங்கள். அப்படி நிலுவையில் இருந்தால் உடனே அனைவரும் சென்று கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளுங்கள். இதனை தவிர்த்தால் பின்னாளில் ரேஷன் கார்டே கூட ரத்தாக நேரிடலாம்.பணி நிமித்தமாக வேறு பகுதியில் வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

அதேபோல், உயிரிழந்த உறுப்பினா்களின் பெயா்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களை சமா்ப்பித்து நீக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் அருகில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளா்களிடம் உயிரிழந்த உறுப்பினா்களின் குடும்ப அட்டை, ஆதாா் அட்டையின் நகலை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. TNPDS இணையதளத்திலும் இதற்காக விண்ணப்பம் செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+