சென்னை: நம் வீட்டின் சமையலறையில் சமைக்கப்படும் உணவுகளைப் போல வெளியில் சாப்பிடும் அனைத்து உணவுகளும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தான் சாப்பிடுகிறோம். ஆனால் சமீப காலமாக உணவுப் பொருட்களில் எதிர்பாராத அதிர்ச்சி தரும் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவது வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது. சமீபத்தில், லேஸ் பாக்கெட்டுகளில் கூட கரப்பான் பூச்சி கண்டறியப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் நம் மனதில் சுகாதாரம் பற்றிய பெரும் கேள்வியை எழுப்புகின்றன. சமீப காலமாக உணவுப்பொருட்களில் என்னென்ன அதிர்ச்சி தரும் பொருட்கள் கண்டறியப்பட்டன என்பதை விரிவாக பார்ப்போம்.
வேஃபர்ஸில் காணப்பட்ட பொரித்த தவளை: ஜாம்நகரில், பாலாஜி வேஃபர்ஸ் பாக்கெட்டில் ஒரு பொரித்த தவளை கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஜாம்நகர் மாநகராட்சி குழுமம் விசாரணை தொடங்கி, உள்ளூர் விற்பனையாளரை அழைத்து அந்த பேட்ச் முழுவதையும் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது. அந்த வேஃபர்ஸ் பாக்கெட்டை 9 வயது குழந்தைக்காக வாங்கியதாகவும், அதில் இறந்த தவளை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் வேஃபர்ஸ் பாக்கெட்டை வாங்கியவர் தெரிவித்தார். இதனால் அவர்கள் உடனடியாக அந்த பாக்கெட்டை தூக்கி எறிந்துள்ளனர்.

ஹேர்ஷேஸ் சிரப்பில் இறந்த எலி: ஒரு குடும்பத்தினர் வாங்கிய ஹேர்ஷேஸ் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குடும்பத்தின் 3 உறுப்பினர்கள் ஏற்கனவே சிரப்பை சாப்பிட்ட பிறகு அந்த எலி கண்டுபிடிக்கப்பட்டது. எலியுடன் இருந்த சிரப்பின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஏர் இந்தியா உணவில் பிளேடு: பெங்களூரில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு ஏர் இந்தியா விமானம் Al 175-இல் பயணித்த பயணி ஒருவர், விமானத்தில் வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திப்பழ சாட்டில் ஒரு பிளேடு இருப்பதைக் கண்டுபிடித்தார். மாதுரஸ் பால் என்ற பயணி, ப்ளேடைப் பல்லால் கடித்ததால் அதிர்ஷ்டவசமாக காயம் தவிர்க்கப்பட்டது. ஏர் இந்தியாவின் கேட்டரிங் சேவைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

ஐஸ்கிரீமில் மனித விரல்: மலாட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த Yummo ஐஸ்கிரீமில் மனித கட்டைவிரலைக் கண்டுபிடித்தார். மேலும் அந்த நபர் மலாட் காவல்துறையிடம் சம்பவத்தைக் கூறிப் புகாரளித்தார். காவல்துறையினர் கட்டை விரலை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி, ஐஸ்கிரீம் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அமுல் ஐஸ்கிரீமில் சென்டிபீட்: நொய்டாவில் உள்ள ஒரு பெண், விரைவான டெலிவரி செயலி மூலம் ஆர்டர் செய்த அமுல் ஐஸ்கிரீம் டப்பாவில் பூரான் இருப்பதைக் கண்டறிந்தார். அமுல் நிறுவனத்தை மேற்பார்வையிடும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF), இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், கடுமையான தரக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதாக வாடிக்கையாளருக்கு உறுதியளித்தது. இது குறித்து நொய்டாவின் உணவு பாதுகாப்பு துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

அமேசான் டெலிவரி பாக்ஸில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலருடன் பாம்பு: பெங்களூர் பெண் ஒருவர் மைக்ரோபாக்ஸ் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்து, ஜூன் 18 அன்று பெற்ற அமேசான் பாக்ஸில் பாம்பு இருந்துள்ளது.
டைரி மில்க் சாக்லேட்டில் புழு: ஹைதராபாத்தில் வசிக்கும் ஒருவர், அவரது பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கிய கேட்பரி சாக்லேட்டில் உயிருள்ள புழு ஒன்றைக் கண்டறிந்தார். இதன் எதிரொலியாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அப்பகுதியில் ஆய்வு செய்து, 20 சாக்லேட் மாதிரிகளை சேகரித்து, பொருட்களை திரும்ப பெற உத்தரவிட்டனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications