ஐஆர்சிடிசி நிறுவனம் இந்திய ரயில்வேயுடன் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலா திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மூன்று தென்னிந்திய மாநிலங்களுக்கு 10 நாட்களுக்கான ஒரு பிரத்தியேக ஆன்மீக சுற்றுலா திட்டத்தை ஐஆர்சிடிசி அறிவித்திருக்கிறது.
ராமேஸ்வரம் தொடங்கி திருப்பதி வரை என தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய முக்கியமான அனைத்து கோயில்கள் மற்றும் ஆன்மீக தலங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் பாரத் கௌரவ் டூரிஸ்ட் டிரெயின் பேக்கேஜ் (Bharat Gaurav Tourist Train package) என்ற ஒரு சுற்றுலா பேக்கேஜை அறிமுகம் செய்திருக்கிறது . 9 இரவுகள் 10 பகல் என நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 16ஆம் தேதி வரை இந்த சுற்றுலா பயணம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

5 முக்கிய நகரங்களுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கோவில்கள் மற்றும் ஆன்மீக தலங்கள், சுற்றுலா தலங்களை மக்கள் பார்வையிட முடியும். இந்த புதிய பாரத் கௌரவ் ரயில் திருப்பதியில் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறது. அங்கே மக்கள் பத்மாவதி தாயார் கோயில், பெருமாள் கோயில் ஆகிய இரண்டிலும் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து ராமேஸ்வரம் செல்வார்கள். ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி , ராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் அடுத்ததாக அந்த ரயில் மதுரைக்கு செல்கிறது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதனையடுத்து கன்னியாகுமரிக்கு செல்லக்கூடிய இந்த ரயில் ஹால்ட் செய்யப்படும். அங்கே விவேகானந்தர் நினைவு மண்டபம் , காந்தி மண்டபம் மற்றும் அங்கு இருக்கக்கூடிய கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இறுதியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள் . அங்கே பத்மநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவளம் கடல் கரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த பயணத்தில் ஆன்மீக தலங்கள் மட்டும் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய அனைத்து ஊர்களிலும் இருக்கக்கூடிய சிறப்பு சுற்றுலா தலங்களுக்கும் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவதை உறுதி செய்யவும் சௌகரியமான அனுபவத்தை வழங்கும் பல்வேறு ஏற்பாடுகளை ஐஆர்சிடிசி செய்திருக்கிறது .
ஐஆர்சிடிசி-யின் இந்த பத்து நாட்கள் சுற்றுலாத் திட்டத்தில் பயணம் செய்ய 11 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்லீப்பர் கிளாஸில் 18,040 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும். அதே போல 3ஏசி பெட்டியில் பயணம் செய்ய விரும்புபவர்கள் 30,370 ரூபாய், 2ஏசி வகுப்பில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு 40 ,240 ரூபாயும் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஸ்லீப்பர் கிளாஸில் 16,890 3ஏசி பெட்டியில் 29,000, 2ஏசி பெட்டியில் 38,610 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
இது ரயிலுக்கான போக்குவரத்து கட்டணம் மட்டுமில்லாமல் உணவு ,தங்குமிடம் ,உள்ளூர் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக்கும் என சேர்த்து மொத்த கட்டணமாக வசூல் செய்யப்படுகிறதாம். ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும் செயலி வாயிலாகவும் இந்த பாரத் கௌரவ் திட்டத்தில் ஆன்மீக சுற்றுலா செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications