தங்கம் மீதான வரியை இன்னும் குறைத்தால் நல்லா இருக்கும்.. எதிர்பாா்ப்பில் தங்க துறை..!!
நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். ஒவ்வொரு துறையும், தங்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான சீர்த்திருத்தங்கள் குறித்த எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. தங்கம் மற்றும் நகை துறையின் நிதி ஆரோக்கியத்தை அதிகரிக்க தங்கம் இறக்குமதி வரியான வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இத்துறை உள்ளது. அடுத்ததாக கிரிப்டோ கரன்சி துறை, லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளது.

முந்தைய நிதியாண்டில் நம் நாடு 746 டன் தங்கம் இறக்குதி செய்து இருந்தது. இந்நிலையில் கடந்த பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. வரி குறைக்கப்பட்டதால் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இறக்குமதி அதிகரிக்கவில்லை. இந்த நிதியாண்டில் கடந்த நவம்பர் வரை நம் நாடு 664 டன் அளவுக்கே தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. எனவே இது மேலும் வரி குறைப்புக்கான தேவையை வலுப்படுத்துகிறது. எதிர்வரும் பட்ஜெட்டில், தங்கம் இறக்குமதி மீதான வரியை 6 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக மத்திய அரசு குறைக்கும் என நகை துறை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

தங்கம் மீதான வரியை இன்னும் குறைத்தால் நல்லா இருக்கும்.. எதிர்பாா்ப்பில் தங்க துறை..!!

ஏனெனில் வரி குறைப்பு இத்துறையின் நிதி ஆரோக்கியத்திற்கு ஊக்கமளிக்கும். இந்திய தங்கம், வெள்ளி மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், தங்க இறக்குதி வரியை குறைக்கவும், சர்வதேச புல்லியன் எக்ஸ்சேஞ்ச் (ஐஐபிஎக்ஸ்) வாயிலாக அனைத்து தங்க இறக்குமதிகளையும் அனுமதிப்பதற்கும் எங்கள் அமைப்பு நீண்டகாலமாக முயற்சியை எடுத்து வருகிறது. மேலும், ஐஐபிஎக்ஸ் மூலம் அனைத்து தங்க இறக்குமதிகளையும் ஒழுங்கப்படுத்த வேண்டும். இதனால் தங்கத்தை ஏற்றுமதி செய்வதற்கும், தங்கத்தை இறக்குமதி செய்வதிலும் வங்கியாளர்களின் பங்கினை குறைப்பதற்கு உதவும் என தெரிவித்தார்.

காயின்ஸ்விட்ச் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் கூறுகையில், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் வரி விதிக்கப்படுவது மற்றும் இழப்புகளை ஈடுசெய்ய இயலாமை அதாவது எந்த இழப்புகளையும் காரணியாக்காமல் தங்கள் முழு லாபத்திற்கும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும். கூடுதலாக ஒவ்வொரு கிரிப்டோ பரிவர்த்தனையிலம் 1 சதவீதம் டிடிஎஸ் செய்யப்படுவது முதலீட்டாளர்களின் மூலதனத்தை குறைத்து வர்த்தகத்தை கட்டுப்படுத்துகிறது. இவை கிரிப்டோகரன்சி துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்களும் கிரிப்டோ சுற்றுச்சூழல் அமைப்பில் செழித்த வளர ஒரு சமமாள தளம் அவசியம் என்று தெரிவித்தார். எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில், கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தெளிவான கட்டமைப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என இத்துறை எதிர்பார்க்கிறது.

story written by: subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+