2025ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயருமா? – நிபுணர்கள் சொல்வது என்ன..?

சென்னை: 2024 ஆம் ஆண்டில் பல்வேறு சர்வதேச காரணிகள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வளர்ச்சி பாதையிலேயே இருந்து வந்தது. 2025 ஆம் ஆண்டிலும் இதே நிலை நீடிக்கும் என இந்தியாவை சேர்ந்த பல்வேறு தரகு நிறுவனங்களும் கணிப்பு வெளியிட்டுள்ளன.

பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை வளர்ச்சியிலேயே இருந்தது.

2025ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயருமா? – நிபுணர்கள் சொல்வது என்ன..?

அது தவிர அமெரிக்க அதிபர் தேர்தலும் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. தங்கத்தின் விலை உயர்வதற்கு மற்றொரு முக்கிய காரணம் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களுடைய பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்வதற்காக பெருமளவில் தங்கத்தை வாங்கி வைத்தன.

2024 ஆம் ஆண்டில் மத்திய வங்கிகள் 500 டன்களுக்கும் அதிகமான அளவிற்கு தங்கத்தை வாங்கி கையிருப்பு வைத்துக் கொண்டன. இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமானது. அதே வேளையில் கோல்ட் ஈடிஎப்-களில் செய்யப்படும் முதலீடுகளின் அளவு அதிகரித்தது. இந்தியாவில் கோல்ட் ஈடிஎப்- களில் முதலீடு செய்த தொகை 30 ஆயிரம் கோடியையும் வெள்ளி ஈடிஎப்-களில் செய்யப்பட்ட முதலீடுகளின் அளவு 7500 கோடியையும் கடந்தது.

இந்தியாவில் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்ததன் காரணமாக பண்டிகை காலங்களில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டில் இந்தியா 700 டன்களுக்கும் அதிகமான தங்கத்தையும் 6000 டன்களுக்கு அதிகமான வெள்ளியையும் இறக்குமதி செய்திருப்பது தெரிய வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை 2025 ஆம் ஆண்டில் பாசிட்டிவ் ஆகவே இருக்கும் என மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னும் குறிப்பிட்ட நாடுகளில் போர் பதற்றம் தணியாமல் இருப்பதும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுக்கலாம் என்ற பேச்சு பரவுவதாலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயரும் என தெரிவிக்கப்படுகிறது.

தங்கத்தின் விலை கணிசமான வளர்ச்சியையும் வெள்ளியின் விலை வேகமான வளர்ச்சியையும் எட்டும் என மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் ஆய்வாளர் மானவ் மோடி தெரிவித்துள்ளார்.

வெள்ளியை பொருத்தவரை பல்வேறு மின்னணு சாதனங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட தொழில் ரீதியாகவும் வெள்ளிக்கான தேவை அதிகமாக இருப்பதால் 2025 ஆம் ஆண்டில் வெள்ளியின் டிமாண்ட் அதிகரித்து விலை உயரும் என தெரிவிக்கின்றார். தங்கம் , வெள்ளியின் விலை குறையும் போதெல்லாம் வாங்கி வைத்துவிட வேண்டுமென அறிவுரை வழங்குகின்றனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+