அமெரிக்கா வெனிசுலா மீது நடத்திய ராணுவ நடவடிக்கை மற்றும் அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் வெளியிட்டு வரக்கூடிய அறிவிப்புகள் காரணமாக உலக அளவில் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தங்கம், வெள்ளி விலையை பெருமளவு உயர்த்தி இருக்கிறது.
சென்னையில் 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று முறை தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வு கண்டிருக்கின்றன. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று காலை, மாலை என இருவேளையும் உயர்ந்தது. இன்று காலையில் மீண்டும் விலை உயர்ந்திருக்கிறது . நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து 12,760 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 12,830 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை இன்று 560 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது 1,02,080 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 1,02,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 24 மணி நேரத்தில் கிராமுக்கு 230 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது ஒரு சவரனுக்கு 1840 விலை உயர்ந்திருக்கிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 77 ரூபாய் உயர்ந்து 13,997 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,11,976 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 50 ரூபாய் விலை உயர்ந்து 10,700 ரூபாய்க்கும் ஒரு சவரன் 85,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நேற்று 266 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளி ஒரு கிராம் இன்று 271 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு 14 ரூபாய் விலை உயர்ந்துள்ளது, ஒரு கிலோ 14000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அமெரிக்கா செய்த செயலால் உலகம் முழுவதுமே தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பல மடங்கு உயர்வு கண்டிருக்கின்றன . சர்வதேச சந்தையில் ஸ்பாட் கோல்டு விலையே இதற்கு சாட்சி. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,446 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விட 3.09% அதிகமாகும். வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 78.86 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று 8.37% அதிகமாகும்.
சர்வதேச சந்தையில் இப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் இனிவரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை உயரும். இந்திய எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை இன்று, 1,38,645 ரூபாயை கடந்தது . வெள்ளியை பொருத்தவரை 2,50,200 ரூபாய் உச்சத்தை இன்று தொட்டிருக்கிறது. அதாவது எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் பியூச்சர்ஸ் கான்டிராக்டில் விலை உயர்கிறது என்றால் முதலீட்டாளர்கள் இவற்றின் விலை உயரும் என கணித்து அதிக மதிப்பு கொண்ட கான்டிராக்டுகளை வாங்குகிறார்கள் என அர்த்தம்.
வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை இதற்கு உலக நாடுகளின் எதிர்வினை, வேறு சில நாடுகள் மீது அமெரிக்கா இதே போன்ற ராணுவ நடவடிக்கை எடுக்க போகிறதா என்பதை பொறுத்து வெள்ளி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும். இந்த வார இறுதிக்குள் எதுவாக இருந்தாலும் தெரிந்துவிடும்.
More From GoodReturns

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications