தங்கம் என்பது என்னதான் நெருக்கடியான காலகட்டமாக இருந்தாலும், தங்கத்தின் தேவையானது அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் கடந்த 9 மாதங்களில் தங்கத்தின் தேவையானது இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இது குறித்த வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின் படி, இந்தியாவின் தங்க இறக்குமதி ஏப்ரல் - டிசம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் 38 பில்லியன் டாலராக இருமடங்காக அதிகரித்துள்ளது.
இது நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. எனினும் தற்போது ஓமிக்ரான் அதிகரித்து வரும் நிலையில், இனியும் இறக்குமதியானது அதிகரிக்குமா? என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.
தேவை அதிகரிப்பு
இது கொரோனா நெருக்கடி காலகட்டத்திலும் தங்கத்தின் தேவையானது வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், இந்தளவுக்கு இறக்குமதியானது அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் - டிசம்பர் 2020 காலகட்டத்தில் தங்கம் இறக்குமதியானது 16.78 பில்லியன் டாலராக இருந்துள்ளது.
டிசம்பர் 2021
கடந்த டிசம்பர் மாதத்தில் கூட இறக்குமதியானது 2021ல் 4.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4.5 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது விழாக்கால பருவம் மற்றும் திருமண விழாக்கள் என பலரும் தங்கத்தின் இறக்குமதியினை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
தங்கம் இறக்குமதியானது கடந்த 9 மாதங்களில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது, 142.44 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் - டிசம்பர் 2020ல் 61.38 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி இறக்குமதியும் அதிகரிப்பு
இதே கால கட்டத்தில் வெள்ளி இறக்குமதியானது 2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 762 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு அடுத்ததாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. இறக்குமதி செய்யப்படுவதில் அதிகளவில் நகைக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஏற்றுமதி
ஜெம் & ஜூவல்லரி ஏற்றுமதியானது ஒன்பது மாத காலகட்டத்தில் 71% அதிகரித்து, 29 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 9.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி-யில் 1.3% வந்துள்ளது.