சென்னை: இந்தியாவில் சாதாரண மக்களை பொருத்தவரை தங்கம் என்பது ஒரு முதலீடு மட்டும் கிடையாது, ஒரு அவசர பண தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய ஒரு பொருள். மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஒரு அவசர பண தேவை ஏற்பட்டால் உடனடியாக வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிடமோ தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்வார்கள் .
தங்க நகை கடன்: தனிநபர் கடன், வீட்டுகடன், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடும் போது நகையை அடகு வைத்து கடன் வாங்குவது எளிமையானதாக இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் மீது கடன் வாங்கும் போக்கு அதிகரித்து இருக்கிறதாம். 2025 மார்ச் 21ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் தங்க நகைகளின் மீது வாங்கப்பட்டிருக்கும் கடன்களின் மொத்த மதிப்பு 2.08 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.3 லட்சம் கோடி ரூபாயாகத்தான் இருந்தது.

அதிகரிக்கும் நகை கடன்: இந்தியாவில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கும் போக்கு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தரவுகள் குறிப்பிடுகின்றன. தங்கத்தின் விலை அதிகரித்திருப்பது, ரிசர்வ் வங்கி கடன்கள் வாங்கும் நடைமுறையில் கொண்டு வந்திருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவையே தங்க நகை கடன்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விலை உயர்வதால் கடனும் உயர்வு: தனிநபர் கடன் பெறுவது மற்றும் சிறு கடன்கள் பெறுவதில் பல்வேறு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்பதால் மக்கள் இயற்கையாகவே தங்க நகை கடன்களை நோக்கி தான் வருகிறார்கள் என உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சஞ்சீவ் நாட்டியால் தெரிவிக்கிறார். 2020 மார்ச் முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் பார்த்தால் இந்தியாவில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கும் விகிதம் ஆண்டுக்கு 44% என்ற வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
5 ஆண்டுகளில் எவ்வளவு உயர்வு: கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 122 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2020 மார்ச்சில் இந்தியாவில் தங்க கடன்களின் மொத்த மதிப்பு 33,257 கோடி ரூபாய் தான் அதுவே இந்த ஆண்டு மார்ச் மாதம் 2 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்த இதே காலகட்டத்தில் தங்கத்தின் விலை பார்த்தால் 10 கிராம் தங்கத்தின் விலை 2020 மார்சில் 38, 600 ரூபாய் என இருந்து தற்போது 85, 800 ரூபாய் என உயர்ந்திருக்கிறது.
மக்கள் என்ன செய்கிறார்கள்: தங்கத்தின் விலை ஏறும் போது பெரும்பாலான மக்கள் ஏற்கனவே அடகு வைத்த நகையை மீட்டு மீண்டும் அதனை அதிக விலைக்கு அடகு வைத்து கடன் வாங்குகிறார்கள் என நிதி நிறுவனங்கள் கூறுகின்றன. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் தங்கத்தின் மீதான கடன் வழங்குவது என்பது மற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பானதாக இருப்பதால் அவர்களும் அதைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியில் தங்கத்தின் மீதான கடன் என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 53 சதவீதம் அதிகரித்து 50,000 கோடியாக உயர்ந்திருக்கிறது, முத்தூட் பைனான்ஸ் கம்பெனியில் தங்கத்தின் மீதான கடன் அளவு என்பது 1 லட்சம் கோடியை கடந்து இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!



Click it and Unblock the Notifications