தங்கம் vs பங்குச்சந்தை.. எந்த முதலீடு சிறந்தது..? நீண்ட காலத்திற்கு எது பெஸ்ட்..?

தங்கம் தற்போது வரலாறு காணாத உச்சத்தில் இருப்பதாலும், பங்குச் சந்தை நிதானமான வளர்ச்சியைக் காட்டுவதாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் "எதில் முதலீடு செய்வது சிறந்தது?" என்ற பெரிய விவாதம் எழுந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,123 அமெரிக்க டாலராகவும், இந்திய மதிப்பில் 10 கிராம் தங்கம் ரூ.1,26,090 ஆகவும் உள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் 2,600 டாலராக ஆக இருந்த தங்கம், வெறும் சில மாதங்களில் 58% லாபம் தந்திருப்பதுதான் இந்த விவாதத்திற்கு காரணம். ஆனால், இந்த ஒப்பீட்டை நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டியது அவசியம்.

குறுகிய கால ஜாம்பவான் : குறுகிய கால முதலீட்டைப் பொருத்தவரை, தங்கம் லாப வேட்டையில் பங்குச் சந்தையை மிகத் தெளிவாக விஞ்சியுள்ளது. நடப்பு 2025 ஆம் ஆண்டில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை சுமார் 8% முதல் 9.5% வரை மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன. ஆனால், தங்கம் 58% என்ற பிரம்மாண்டமான வருமானத்தை அளித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தை கணக்கில் கொண்டால், தங்கம் 61% லாபம் ஈட்டியுள்ளது; அதே சமயம் சென்செக்ஸ் வெறும் 9% மட்டுமே உயர்ந்துள்ளது. இதுவே முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்த முக்கிய காரணம். ஏனெனில், உடனடி லாபத்தை கணக்கில் கொண்டால், தங்கம் தற்போது அபாரமாகச் செயல்பட்டுள்ளது.

 தங்கம் vs பங்குச்சந்தை.. எந்த முதலீடு சிறந்தது..? நீண்ட காலத்திற்கு எது பெஸ்ட்..?

நீண்ட காலப் போட்டி : குறுகிய கால லாபத்தை மட்டும் பார்க்காமல் 10, 15, 20 ஆண்டுகள் என நீண்ட கால முதலீட்டைக் கணக்கில் கொண்டால், தங்கத்தின் வருமானமும் பங்குச் சந்தையின் வருமானமும் கிட்டத்தட்டச் சமமாகவே உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் பங்குச் சந்தை (சென்செக்ஸ்) சராசரியாக ஆண்டுக்கு 13% கூட்டு வளர்ச்சி (CAGR) கொடுத்துள்ளது. தங்கம் 11.5% கூட்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதாவது, மிக நீண்ட காலத்தில் பங்குச் சந்தை சற்று கூடுதல் வருமானம் கொடுத்துள்ளது. அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் ஆச்சரியப்படும் விதமாக, தங்கம் மற்றும் சென்செக்ஸ் இரண்டும் சராசரியாக 12.7% கூட்டு வளர்ச்சி வருமானத்தை கொடுத்துள்ளன. நீண்ட கால நோக்கில் பார்த்தால், தங்கம் மற்றும் பங்குச் சந்தை இரண்டும் கிட்டத்தட்ட சமமான, போட்டி நிறைந்த வருமானத்தையே வழங்கியுள்ளன.

முதலீட்டுக்கான எச்சரிக்கை : பொதுவாக, உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை, போர் அபாயம் அல்லது அரசியல் நிச்சயமற்ற காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக உயர்கிறது. தற்போது தங்கத்தின் விலை உயர்வுக்கு உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்குவது ஆகியவையே முக்கியக் காரணங்கள் ஆகும். ஆனால், தங்க முதலீட்டாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை உள்ளது

தங்கம் சில காலங்களில் எந்த வளர்ச்சியுமின்றி ஒரே நிலையில் தேங்கி நிற்கவும் அல்லது பல ஆண்டுகளாக எதிர்மறை வருமானத்தை கொடுக்கவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக, 1980 இல் 600 டாலராக ஆக இருந்த தங்கம், 2006 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு அதே விலையை மீண்டும் எட்டவே போராடியது.

எனவே, நிதி ஆலோசகர்கள் கூறுவது போல, அதிக ரிஸ்க் உள்ள பங்குச் சந்தை மற்றும் பாதுகாப்பான தங்கம் ஆகிய இரண்டிலும் முதலீட்டை பிரித்துப் போடுவதுதான் புத்திசாலித்தனம். ஒரு முதலீட்டாளர் தனது மொத்த முதலீட்டில் 10% முதல் 15% வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்கத்தை ஆபரணமாக வாங்குவதற்கு பதிலாக, தங்க இ.டி.எஃப் (Gold ETF) அல்லது டிஜிட்டல் தங்கம் போன்ற வழிகளில் முதலீடு செய்வது செலவை குறைக்கும் சிறந்த முறையாகும் என்று தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+