தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் இந்தியாவில் ரீடைல் சந்தையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனாலும் ஆர்பிஐ, வங்கிகள், பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி குவித்தாலும், ரீடைல் சந்தை விற்பனைக்கு ஈடுகொடுக்கும் டிமாண்ட் இல்லை.
இதனால் முழுக்க முழுக்க சர்வதேச வர்த்தக சந்தையின் போக்கின் அடிப்படையிலேயே தங்கம் விலை இந்தியாவில் நிர்யணம் செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. முன்பு இந்தியச் சந்தையில் இருக்கும் டிமாண்ட்க்கு ஏற்ப தங்கம் விலை சர்வதேச விலை போக்கிற்கும், உள்நாட்டிற்கும் சில வித்தியாசம் இருக்கும். ஆனால் இப்போது நிலைமை வேறு.

டாலர் மதிப்பில் கணக்கிடப்படும் சர்வதேச தங்கம் விலை, தொடர்ந்து இரண்டு நாட்களாகவும், கடந்த நான்கு வர்த்தக நாட்களில் மூன்று முறை உயர்வுடனும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கம் ஒரு புதிய வரலாற்று உச்சத்தை எட்டி, ஒரு அவுன்ஸ் சுமார் 3,077 டாலர் முதல் 3,078 டாலர் வரையில் வர்த்தகமானது.
இந்த திடீர் உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வரி விதிப்பதும், இதற்கு மற்ற நாடுகளும் பதிலடி வரியை விதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதே முக்கிய காரணமாகும்.
இப்படி பதிலுக்குப் பதில் வரியை விதித்தால் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும். இதன் உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி என உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே சற்று அதிகமாகவே உள்ளது. இதனாலேயே பங்குச் சந்தைகளில் அடிக்கடி மந்தநிலை நிலவுகிறது, இத்தகைய சூழ்நிலையில் தான் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தைத் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
டிரம்ப்பின் வரி விதிப்பு அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறையக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது, இதை அந்நாட்டு மத்திய வங்கியும் உறுதி செய்துள்ளது. இதனால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக பத்திர சந்தையிலும் முதலீடுகள் குறைந்து வருகிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பிலும் மந்த நிலை உருவாகி தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தியுள்ளது. இதனால் ஏப்ரல் 2 டிரம்ப்-ன் வட்டி முடிவுகள், இதன் பின்பு ஏற்படும் பணவீக்கம், வேலைவாய்ப்பு, டாலர் மதிப்பு ஆகியவை நிலை பெறும் வரையில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே இருக்கும்.
டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவீதம் வரியை விதித்தது தொடர்ந்து ஏப்ரல் 3 முதல் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது 25% வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது வெறும் டிரைலர் என்ற வகையில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில் தான் இந்த வாரம் 3000 டாலரில் துவங்கிய ஒரு அவுன்ஸ் தங்கம் விலை தற்போது 3078 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, ஏற்கனவே சந்தை கணிப்புகள் 3300 டாலர் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போதைய வர்த்தக சூழ்நிலையை பார்க்கும் போது இது வரைவாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் இந்த வாரம் மட்டும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1200 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1100 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications