கோயம்புத்தூர், மதுரையில் தங்கம் விலை 2வது நாளாக உயர்வு.. ஓ இதுதான் காரணமா..?

இந்தியாவில் தங்கம் விலை எப்போதும் சர்வதேச சந்தையைச் சார்ந்தே இருக்கும், இதற்கு முக்கியமான காரணம் இதை உள்நாட்டில் உற்பத்தி செய்யாமல் இருப்பது தான். கச்சா எண்ணெய் போலவே இந்திய மக்களின் தங்கத்திற்கான தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இதற்கான பணத்தை டாலரில் செலுத்தி வருகிறோம். எனவே இந்தியாவில் விற்கப்படும் தங்கம் விலை சர்வதேசச் சந்தை விலை மற்றும் டாலர் மதிப்பின் கலவையாகும். பட்ஜெட் அறிவிப்பால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் அதிகம் தங்கம் வாங்கும் மண்டலத்தில் கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதேவேளையில் கோயம்புத்தூரில் இருந்து அதிகப்படியான தங்கம் நகைகள் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர், மதுரையில் தங்கம் விலை 2வது நாளாக உயர்வு.. ஓ இதுதான் காரணமா..?

இந்த நிலையில் இன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் ரீடைல் சந்தையில் ஒரு சவரன் தங்கம் விலை 80 ரூபாய் உயர்ந்து 51,440 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்ட முடிவுகள் தான்.

அந்நாட்டின் பணவீக்க அளவுகள் பெடரல் ரிசர்வ் நிர்ணயம் செய்த 2 சதவீத அளவீட்டுக்குக் குறைவாக வந்துள்ளதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைக்கப்போவதாக அறிவித்தது. இதன் வாயிலாக அமெரிக்கப் பத்திர சந்தையில் செய்யப்பட்ட முதலீடுகள் அதிகளவில் வெளியேறி தங்கம் மீது கணிசமாகக் குவிந்தது. இதனால் இனி தொடர்ந்து முதலீடுகள் பத்திர சந்தையில் வெளியேறி தங்கம் மீது குவிந்து, இதன் விலை அதிகரிக்க உள்ளது.

ஜூலை மாத வர்த்தகத்தைப் பார்க்கும் போது யாரும் மிகப்பெரிய சரிவு பதிவாகியுள்ளது, ஜூலை 17ஆம் தேதி அதிகப்படியாக 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 6920 ரூபாயாக இருந்தது. ஆனால் ஜூலை 30 ஆம் தேதி மிகவும் குறைந்தபட்ச விலையாக 6385 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் தங்கம் விலை 3.96 சதவீதம் சரிந்துள்ளது.

தங்கத்தைப் போலவே கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் ரீடைல் சந்தையில் வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலை அதிகரித்துள்ளது. இன்று நகைக்கடைகளில் ஒரு கிராம் வெள்ளி விலை 0.70 பைசா அதிகரித்து 91.70 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிராம் 19 ரூபாய் அதிகரித்தது 2615 ரூபாயாக உள்ளது.

இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2329 டாலரில் இருந்து 2426 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+