தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையால் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தங்கம் விலை மற்றும் முதலீட்டு போக்கிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில் தங்கம் விலை நகர்வு மற்றும் Gold ETF முதலீடுகள் குறித்து முக்கியமான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை
சென்னை ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹251 உயர்வுடன் ₹14,902 ஆக விற்பனையாகிறது. 22 காரட் தங்கம் ₹13,660க்கு (₹230 உயர்வு) மற்றும் 18 காரட் தங்கம் ₹11,400க்கு (₹200 உயர்வு) சென்றுள்ளது.

MCX-இல் ஜூன் 5, 2026 ஃபியூச்சர் ஒப்பந்தத்தில் 10 கிராம் 24 காரட் தங்கம் ₹1,47,270-இல் வர்த்தகமாகி +0.01% உயர்வுடன் உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 112.96 டாலர் உயர்ந்து அதாவது 2.58% உயர்ந்து 4,492.99 டாலராக வர்த்தகமாகிறது.

ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் தற்போது தங்கம் விலை முழுமையாக வளர்ச்சி பாதையில் இல்லை. சில நாளில் சரிவை சந்தித்த பின்னர் மீண்டும் உயரும் போக்கு கொண்டுள்ளது, இது நிலையான ஏற்றமாக இல்லை என்று கூறுகிறார். இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக வளைகுடா நாடுகளில் நிலவும் போர் மற்றும் அதனால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் சந்தை பாதிப்புகள்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு தங்கம் விலைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காரணம், கச்சா எண்ணெய் உலக சந்தையில் டாலரில் வர்த்தகம் செய்யும் முக்கிய பொருளாக உள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, டாலர் வலுப்பெறுகிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டு ஈர்ப்பு குறையும் வாய்ப்பு உள்ளது.

வளைகுடா பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால், உலகளவில் சுமார் 30% வரை சப்ளை குறைந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்த தட்டுப்பாடு இயற்கையானது அல்ல, செயற்கையாக உருவான குறைபாடு என ஆனந்த் ஸ்ரீனிவாசன் விளக்குகிறார்.

இதன் விளைவாக எண்ணெய் மீது அதிக தேவை உருவாகி விலை உயர துவங்கியுள்ளது. இது முதலீட்டு போக்கு தங்கத்திலிருந்து எண்ணெய் சந்தைக்கு மாறும் சூழல் உருவாகியுள்ளது. இதேபோல், முன்பு வெள்ளி ஏற்றுமதி தடைகள் அறிவிக்கப்பட்டபோது ஏற்பட்ட தட்டுப்பாடு போன்றே, தற்போது எண்ணெய் சந்தையிலும் அதே நிலைமை உருவாகியுள்ளது.

இந்த நிலை 4-5 மாதங்களுக்கு நீடித்தால், அதன் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகிறார். இந்திய பொருளாதாரம் இந்த பாதிப்பில் இருந்து மீள 3-4 ஆண்டுகள் கூட ஆகக்கூடும். இது ஒரு வகையில் "மினி டீமோனிடைசேஷன்" அல்லது "கோவிட்" போன்ற பொருளாதார அதிர்வாக பார்க்கப்படலாம் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதனால் பல தொழில்கள் செயலிழக்கும் நிலை உருவாகக்கூடும் என்பதால், இந்த சூழ்நிலை மிகவும் கவனமாக பார்க்கப்பட வேண்டியது அவசியம் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரித்துள்ளார்.

Gold ETF
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு Gold ETF தற்போது அதிக அபாயத்தை ஏற்படுத்தும் கருவியாக மாறியுள்ளது. இதுவரை ETF-கள் முழுமையாக பிசிக்கல் தங்கத்தை ஆதாரமாக வைத்து இருந்தன. ஆனால் புதிய விதிமுறைகளின்படி, 50% வரை Gold Futures-ல் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ETF-களில் "Tracking Error" அதிகரிக்கும் அபாயம் உள்ளது என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். அதாவது, தங்கத்தின் உண்மையான விலை மாற்றத்துடன் ETF விலை சரியாக ஒத்துப்போகாமல் இருக்கலாம். மேலும், Futures மார்க்கெட்டில் உள்ள அபாயங்களை மதிப்பிடுவது சாதாரண முதலீட்டாளர்களுக்கு கடினமாக இருக்கும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த சூழலில், Gold ETF-களில் முதலீடு செய்வது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கிறார். ETF-களில் அதிக அதிர்வுகள் (Volatility) காணப்படுவதால், நேரடியாக பிசிக்கல் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+