2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை சுமார் 11% உயர்ந்து சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும், தங்கத்தில் காலம் காலமாக முதலீடு செய்துள்ளோருக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளது. இதேவேளையில் தங்கம் விலை உயர்வை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள பலர் தங்கத்தை குறைந்த வட்டியில் அடமானமாக வைத்து, அதிக வட்டிக்கொண்ட கடனை அடைத்து வருகின்றனர்.
இதேவேளையில் பல முதலீட்டு நிபுணர்கள், தற்போதைய அதிகப்படியான விலையில் இதன் மீது முதலீடு செய்ய வேண்டாம் எனவும், முதலீட்டு அளவையும் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தங்கம் விலை உயர்வதற்கு என்ன காரணம் என்பது தான் தற்போதைய முக்கியமான விவாதமாக உள்ளது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை விரைவில் 3,000 டாலரை எட்டும் என்றும், 2025ஆம் ஆண்டில் முதல் காலாண்டு முடிவில் 3,080 டாலர் அளவீட்டை தாண்டக் கூடும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தங்கத்தின் இந்த விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், கடந்த 4 வர்த்தக நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட தடாலடி உயர்வுக்கு முழு முக்கிய காரணம் அமெரிக்கா. அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசால் விதிக்கப்படும் வரிகள் காரணமாக உலகளவில் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் தடுமாற்றம் ஏற்படும் எனப்தால் இந்த தடாலடி உயர்வு பதிவாகியுள்ளது.
அமெரிக்க அரசு, உலக நாடுகள் தனது வரி விதிப்பு மூலம் பதிலடி கொடுக்க தயாராகியிருக்கும் வேளையில் சர்வதேச சந்தை ஒருவிதமான பதட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்கா எந்த நாட்டின் மீது வரியை விதித்தாலும் அந்த நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்தும் பாதிக்கும் என்பதலால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்ய தங்கத்தின் மீது அதிகப்படியான முதலீடுகளை செய்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலை ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் $2,943 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் காமெக்ஸ் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,968 ஐ எட்டியுள்ளது.
இந்த சூழ்நிலையை கூடுதலாக சிக்கலாக்கும் வகையில், அமெரிக்கா விதிக்கும் வரிகளில் தங்கத்தின் மீதும் இறக்குமதி வரிகள் விதிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அடிப்பட்டு வருவதாக ஈடி நவ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. டிரம்ப் அரசு இப்புதிய வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, லண்டன், சுவிட்சர்லாந்து மற்றும் ஆசியா போன்ற முக்கிய தங்க நுகர்வு நாடுகளில் இருந்து தங்கம் அதிககமாக வாங்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் தனது ரெசிப்ரோக்கல் வரி விதிக்கும் என கூறப்படுவதால் வர்த்தக போர் உருவாகும் முன்பு அதாவது தங்கம் விலை விண்ணை முட்டும் முன்பும் தங்கத்தை வாங்க மக்கள் ஓடி வருகின்றனர்.
தங்கத்தின் விலை உயர்வுக்கு மற்றொரு முக்கியமான காரணம், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை கொள்முதல் செய்வதுதான். 2024 இல், இந்தியா, அமெரிக்க மத்திய வங்கிகள் உட்பட பல நாடுகளின் மத்திய வங்கிகள் சுமார் 1,045 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இதன் மூலம் கடந்த 3 ஆண்டாக தொடர்ந்து 1,000 டன்களுக்கு அதிகமான தங்கத்தை வாங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டிலும் நாணய மதிப்பை கட்டுப்படுத்தவும், நிதி நிலையை மேம்படுத்துவதற்கும் தங்கத்தை மத்திய வங்கிகள் தொடர்ந்து வாங்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications